Latest Updates
-
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
குரு சுக்கிரனால் உருவாகும் பரிவர்த்தன ராஜயோகம்: நவம்பர் 07 முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது..
Parivarthan Rajyoga On 07 November 2024: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவானும், அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதேப் போல் சுக்கிரன் 26-30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
தற்போது குரு பகவான் சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் 07 ஆம் தேதி சுக்கிரன் குரு பகவானின் ராசியான தனுசு ராசிக்கு செல்லவுள்ளார். இதனால் இவ்விரு கிரகங்களின் நிலைகளால் பரிவர்த்தன ராஜயோகம் உருவாகவுள்ளது. சுக்கிரன் இந்த தனுசு ராசியில் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இருப்பார். இதனால் இந்த ராஜயோகமானது டிசம்பர் 28 ஆம் தேதி வரை நீடித்திருக்கப் போகிறது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது. இப்போது குரு மற்றும் சுக்கிரனால் உருவாகியுள்ள பரிவர்த்தன ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரனும், 10 ஆவது வீட்டில் குருவும் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு நவம்பர் 07 முதல் மிகவும் அற்புதமாக இருக்கப்போகிறது. குழந்தைகளைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் நீங்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டால் நல்ல வெற்றியைப் பெறலாம். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், அந்த வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியுடன், நிதி நன்மைகளும் கிடைக்கும். மொத்தத்தில் தொழில் ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு பரிவர்த்தன ராஜயோகத்தால் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வீடு, வாகனம், சொத்து வாங்கும் ஆசை நிறைவேறும் வாய்ப்புள்ளது. தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசித்து, நிறைய செல்வத்தைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் குருவும், 2 ஆவது வீட்டில் சுக்கிரனும் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பரம்பரை சொத்துக்களைப் பெறும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குரு மற்றும் சுக்கிரனின் ஆசியால் தொழிலில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications