12 ஆண்டுகளுக்கு பின் குரு உருவாக்கும் சக்திவாய்ந்த ராஜயோகம்: இன்று இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்...

Navpancham Rajyog 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் மாதத்திற்கு 2 முறை ராசியை மாற்றுவார். அதே சமயம் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.

ஆனால் இந்த ஆண்டு குரு பகவான் ஆண்டிற்கு 2 முறை ராசியை மாற்றியுள்ளார். தற்போது குரு பகவான் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் இந்த ஆண்டு 2 மாத காலம் இருந்து, பின் மீண்டும் மிதுன ராசிக்கு திரும்புகிறார். இக்காலகட்டத்தில் குரு பகவான் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவார்.

Jupiter Make Navpancham Rajyog 2025 After 12 Years These Zodiac Signs Will Be Lucky

அந்த வகையில் அக்டோபர் 24 ஆம் தேதி குரு பகவான் புதனுடன் சேர்ந்து சக்தி வாய்ந்த ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். அது தான் நவபஞ்சம ராஜயோகம். இந்த ராஜயோகமானது குருவும், புதனும் ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருக்கும் போது உருவாகிறது.

இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. அதுவும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைத்து, வெற்றிகள் குவியும் மற்றும் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. இப்போது குரு புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு புதனால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகத்தால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் வெற்றிகள் குவியும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வெளிநாடு செல்லும் கனவு இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு குரு புதனால் உருவாகும் நவபஞ்சப ராஜயோகத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். வேலை விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். தொழிலில் நிறைய லாபத்தைப் பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அளவில் நிதி நன்மைகள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குறிப்பாக முடிவெடுக்கும் திறன் மேம்படும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வைக் காண்பீர்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு புதனால் உருவாகும் நவபஞ்சப ராஜயோகத்தால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். செல்வம் அதிகரிக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. உயர் அதிகாரிகளுடனான உறவு இனிமையாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, October 24, 2025, 9:30 [IST]
Desktop Bottom Promotion