Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
Indra Ekadashi 2024: இந்திரா ஏகாதசி எப்போது 2024? அன்று கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
சாஸ்திரங்களின் படி, இந்துக்கள் ஏகாதசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.. அதிலும் இந்த புரட்டாசி மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு மிக்கது.. அதனால் அன்றைய தினம் கண்டிப்பாக விரதம் இருப்பது வழக்கம்..பொதுவாகவே ஒரு வருடத்தில் மொத்தம் 24 ஏகாதசிகள் வருகின்றன... அனைத்து ஏகாதசிகளும் வெவ்வேறு பெயர்களால் அறியப்பட்டு அவற்றின் பெயர்களுக்கு ஏற்ப பலன்களையும் தந்துக் கொண்டிருக்கின்றன..
தற்போது, புரட்டாசி மாதம் நடந்து வருகிறது, இந்த மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தில் வரும் ஏகாதசி இந்திரா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில், விஷ்ணு பகவானை வணங்கினால் இந்திரனுக்கு இணையாக அனைத்தும் உங்களுக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.. வாங்க இந்த பதிவில் இந்தரா ஏகாதசி எப்போது? எப்படி வழிபடணும்? என்னென்ன தானம் வழங்கிட வேண்டும் என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம் ..

இந்திரா ஏகாதசி 2024 எப்போது ?
ஏகாதசி திதி செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமை மதியம் 1:20 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 28 சனிக்கிழமை மதியம் 2:49 மணிக்கு முடிவடையும். சாஸ்திரங்களின்படி, உதய திதியில் எந்தத் தேதி வருகிறதோ, அதே நாளில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் செப்டம்பர் 28ம் தேதி இந்திரா ஏகாதசி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
வழிபடும் முறைகள்
இந்திரா ஏகாதசி நாளில், காலையில் நீராடி விட்டு, சுத்தமான ஆடைகளை அணிந்து, விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும்.. உங்கள் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கும் சேர்த்து அஞ்சலி செலுத்தலாம்... வழிபாட்டிற்கு முதலில் விஷ்ணுவின் சிலை அல்லது படத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து நெய் தீபம் ஏற்றவும்.
அந்த தீபத்தை நான்கு முக தீபமாக ஏற்ற வேண்டும்.. இந்திர ஏகாதசி நாளில் நான்கு முக தீபம் ஏற்றி விளக்கேற்றினால், உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. விஷ்ணு பகவான் மஞ்சள் நிறத்தை மிகவும் விரும்புகிறார், எனவே அவருக்கு மஞ்சள் பூக்கள் மற்றும் இனிப்புகளை வைத்து வழிப்பட வேண்டும்..
நான்கு முக தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்
நான்கு பக்க விளக்குகள் நான்கு திசைகளையும் குறிக்கிறது.. அதுமட்டுமல்லாமல் நான்கு திசையிலும் ஒளியைப் பரவச்செய்கிறது.. இந்த திசைகள் மகிழ்ச்சி மற்றும் செழுமையின் அடையாளமாக கருதப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், இந்த விளக்கை ஏற்றி வைப்பது வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது.
இந்த பொருட்களை கண்டிப்பாக தானம் செய்யுங்கள்
புரட்டாசி மாத இந்திர ஏகாதசி அன்று நெய், பால், தயிர் மற்றும் உணவு தானம் செய்வது வழக்கம். இந்த அன்னதானம்தான் தானங்களில் மிக பெரியது.. இந்த நாளில், ஏழைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது, இதன் காரணமாக முன்னோர்கள் திருப்தி அடைகிறார்கள். இவற்றை தானம் செய்வதால் மகிழ்ச்சியும் செழிப்பும் பெருகும், நிதி ஆதாய கிடைக்கும்.. உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











