குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: டிசம்பர் 5 முதல் இந்த 3 ராசிக்கு திடீர் பணம் தேடி வரும்..

Gajkesari Rajyog On 05 December 2025: ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகம் தான் வியாழன் என்னும் குரு பகவான். இந்த குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். ஆனால் இந்த ஆண்டு குரு பகவான் வேகமாக நகர்கிறார். இதனால் 2025-ல் குரு பகவான் மிதுனம், கடகம் ஆகிய இரண்டு ராசிகளில் பயணிக்கிறார்.

இப்படிப்பட்ட குரு பகவான் டிசம்பர் 05 ஆம் தேதி வக்ர கதியில் மிதுன ராசிக்குள் நுழைகிறார். இந்நிலையில் அதே நாளில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரனும் மிதுன ராசிக்குள் நுழைகிறார். இதனால் இவ்விரு கிரகங்களின் சேர்க்கை மிதுன ராசியில் நிகழவுள்ளது. இந்த சேர்க்கையால் மிகவும் மங்களகரமான மற்றும் சக்தி வாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது.

Gajkesari Rajyog On 05 December 2025 Brings Luck Wealth Prosperity To These Zodiac Signs

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். முக்கியமாக எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறவுள்ளனர். இப்போது மிதுன ராசியில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கன்னி

கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றிகளைக் குவிப்பார்கள். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். முதலீடுகளை செய்வதாக இருந்தால், இக்காலத்தில் செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.

மீனம்

மீன ராசியின் 4 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகளைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஆராய்ச்சியில் உள்ள மாணவர்கள் வெற்றியைப் பெறுவார்கள். உங்கள் குழந்தைகளின் ஆசைகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். புரிந்து கொள்ளும் திறன் வலுவடையும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். சமூக நட்புகள் விரிவடையும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, December 4, 2025, 18:16 [IST]
Desktop Bottom Promotion