Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
100 ஆண்டுகளுக்கு பின் ஒரே வேளையில் உருவாகவுள்ள பத்ர, மாளவ்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது...
Badra And Malavya Rajyog Form Together After 100 Years: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, ராஜயோகங்களையும் உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சில சமயங்களில் ஒரே வேளையில் ஒன்றிற்கு மேற்பட்ட ராஜயோகங்கள் உருவாகலாம். இவ்வாறு உருவாவது மிகவும் சிறப்பானது.
அந்த வகையில் ஜூன் மாதத்தில் இரண்டு ராஜயோகங்கள் ஒன்றாக உருவாகவுள்ளன. அதில் அசுரர்களின் குருவான சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைவதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. அதே சமயம் புதன் அதன் சொந்த ராசியான மிதுன ராசியில் நுழைந்து, பத்ர ராஜயோகம் உருவாகவுள்ளது. இப்படி இவ்விரு ராஜயோகங்களும் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் ஒரே வேளையில் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. குறிப்பாக தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது 100 ஆண்டுகளுக்கு பின் ஒரே வேளையில் உருவாகும் பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ஒரே வேளையில் உருவாகும் பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் ரிஷப ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆளுமையும் மேம்படும். நிறைய பணத்தை சம்பாதிப்பதோடு, வெற்றிகளையும் குவிப்பீர்கள்.
பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
சிம்மம்
ஒரே வேளையில் உருவாகும் பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் சிம்ம ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள வேலைகளும் சிறப்பாக முடிவடையும்.
குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வணிகர்களுக்கு பெரிய லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி
ஒரே வேளையில் உருவாகும் பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் கன்னி ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மேலும் எதிர்காலத்தில் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications