Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
உங்க கணவன் அல்லது மனைவியோடு நீங்க கடலை போடணுமாம்... அப்படி செஞ்சா என்ன நடக்கும் தெரியுமா?
ஃப்ளர்ட் செய்வது அல்லது கடலை போடுவது என்பது ஆண், பெண் இருவரும் ஓர் உறவில் ஈடுபடும்போது செய்யும் முதல் விஷயமாகும். இது காதலர்களிடையே மட்டும் காணப்படும் விஷயம் அல்ல. திருமண உறவில் இருப்பவர்களும் தங்கள் துணையிடம் ஃப்ளர்ட் செய்யலாம்.
உறுதியான திருமண உறவில் கூட ஃப்ளர்ட் செய்வது ஓர் இன்றியமையாத அம்சமாக உள்ளது மற்றும் ஆரோக்கியமான உறவைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும். நீங்கள் ஓர் உறவை வலுவானதாக மாற்ற தொடர்பு அவசியம். அதுவும் காதலுடன் ரொமெண்டிக்கான உரையாடலில் ஈடுபடுவது என்பது இருவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும்.

மிகவும் பொதுவான பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலான தம்பதிகள் கடலை போட விரும்புகிறார்கள். ஆனால், திருமணமான சில காலங்களில் அவற்றை விட்டு விடுகிறார்கள். ஓர் சலிப்பான வாழ்க்கையை வாழுகிறார்கள். இது தம்பதிகளுக்குள் உள்ள நெருக்கத்தை அன்பையும் குறைக்கலாம்.
ஆதலால், உறவில் உங்கள் நெருக்கத்தை பழையபடி மீண்டும் கொண்டுவர, உங்கள் துணையுடன் கடலை போடலாம் அல்லது ஃப்ளர்ட் செய்யலாம். வாழ்க்கைத் துணையுடன் கடலை போடுவது மற்றும் ரொமெண்டிக்காக பேசுவது போன்ற தொடர்புகள் திருமண உறவு நீண்ட காலம் மகிழ்ச்சியாக செல்ல வழிவகுக்கும்.
ஃப்ளர்ட்செய்வதன் நன்மைகள் பற்றியும் ஆரோக்கியமான திருமணத்திற்கு அது எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
ஈர்ப்பைத் தக்கவைத்தல்
எல்லா தம்பதிகளும் கடலை போடுவதன் மூலம் தான் உறவில் முதலில் இணைக்கிறார்கள். தம்பதிகளை ஒன்றாக இணைத்த ஆரம்ப ஈர்ப்பான ஃப்ளர்ட் செய்வதை மீண்டும் தூண்டுவதால், தீப்பொறியை உயிருடன் வைத்திருக்கிறது.
வழக்கமான கடலை பேச்சு, சைகைகள் கூட்டாளர்களை முதலில் வசீகரிக்க வைக்கிறது. இது காதலையையும் ஆசையையும் தூண்டுகிறது. மனநிறைவைத் தடுக்க அல்லது ஒருவரையொருவர் சாதாரணமாக எடுத்துக்கொள்வதைத் தடுக்க ஃப்ளர்ட்டிங் செய்வது நல்லது.
உணர்ச்சி இணைப்பு
ஃப்ளர்ட் செய்வது என்பது விளையாட்டுத்தனத்தையும் நகைச்சுவையையும் உள்ளடக்கியது. மேலும் இது தம்பதிகளுக்குள் வலுவான உணர்ச்சிப் பிணைப்புக்கு வழிவகுக்கிறது. இலகுவான கேலி மற்றும் உள்ளே நகைச்சுவைகளில் ஈடுபடுவது பகிரப்பட்ட நெருக்கத்தின் உணர்வை உருவாக்குகிறது.
மன அழுத்தம் நிவாரணம்
வாழ்க்கையின் சவால்கள் சில சமயங்களில் உறவை சிதைத்துவிடும். உங்கள் துணையுடன் ஃப்ளர்ட் செய்வது அன்றாட வாழ்க்கையில் சில வேடிக்கையான நிகழ்வுகளைக் கொண்டுவருகிறது. இது தினசரி மன அழுத்தத்திலிருந்து உங்களை விடுவிக்கிறது. அனைத்து உலக கவலைகளிலிருந்தும் சிறிது நேரத்தில் தப்பித்து, உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
தொடர்பு
ஃப்ளர்ட் செய்யும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் விளையாட்டுத்தனமான ரொமாண்டிக்கான உரையாடல்களில் ஈடுபடும்போது, கூட்டாளிகள் ஒருவரையொருவர் மிகவும் நெருக்கமாகக் கேட்கவும், சிந்தனையுடன் பதிலளிக்கவும் ஊக்குவிக்கிறது. ஒட்டுமொத்த தகவல் தொடர்புத் திறனை இது மேம்படுத்துகிறது.
சுயமரியாதையை அதிகரிக்கும்
பாராட்டுக்கள், விளையாட்டுத்தனமான கிண்டல்கள் மற்றும் வாழ்க்கைத் துணையிடமிருந்து நேர்மறையான கவனத்தைப் பெறுவது சுயமரியாதையையும் நம்பிக்கையையும் அதிகரிக்கும்.
உங்களின் துணை உங்களை விரும்புவதாகவும், உங்களை பற்றி கவர்ச்சியாக இருப்பதாகவும் தோன்ற வைக்க கடலை போட முயற்சி செய்யலாம். உங்கள் துணையை பற்றி நீங்கள் கூறும் விஷயங்கள், அவர்களுக்கு நேர்மறையான சுயமரியாதையை அதிகரிக்கிறது.
உற்சாகம்
எவ்வளவு அன்பான உறவாக இருந்தாலும் சரி, காலப்போக்கில் அது சலிப்பானதாக மாறலாம். அப்படி காலப்போக்கில், உங்கள் உறவு சலிப்பானதாக மாறினால், கடலை போடுவது உறவில் உற்சாகத்தின் அளவைக் கொண்டுவருகிறது. உறவில் விஷயங்களை புதியதாக வைத்திருக்கிறது மற்றும் உங்களை மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கிறது.
உடல் ரீதியான உணர்ச்சிகளை அதிகரித்தல்
கடலை போடுவது தம்பதிகளுக்கு உடல் ஆசைகளை உணர்வுகளை வலுப்படுத்துகிறது. அந்த நுட்பமான தொடுதல்கள், கண் சிமிட்டல்கள் மற்றும் புன்னகைகள் ஆரோக்கியமான திருமணத்தின் அடிப்படைக் கல்லாக இருக்கும். அவற்றை நீங்கள் மீண்டும் தொடங்குவதன் மூலம், உடல் நெருக்கத்தை தம்பதிகளுக்கு நினைவூட்டலாம்.
அன்பை வெளிப்படுத்துதல்
கடலை போடுவது என்பது "ஐ லவ் யூ" என்ற தரத்திற்கு அப்பாற்பட்ட அன்பு மற்றும் போற்றுதலின் ஒரு வடிவமாகும். இது செயல்கள் மற்றும் வார்த்தைகள் மூலம் பாசத்தை வெளிப்படுத்துகிறது. கடலை போடுவதன் மூலம் நேர்மறை உணர்ச்சிகள் மற்றும் நினைவுகள் பலவற்றை நீங்கள் உருவாக்கலாம்.



Click it and Unblock the Notifications












