Latest Updates
-
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம்
மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே பிரச்சினை வர சீரியல்கள் எப்படி காரணமா இருக்குன்னு தெரியுமா?
Mother-in-law Vs Daughter-in-law: நாம் என்னதான் டெக்னாலஜில் முன்னேறிப் போய் கொண்டு இருந்தாலும் இன்றளவும் குடும்ப வன்முறையில் நாம் பின்தங்கித் தான் இருக்கிறோம். இருபதாம் நூற்றாண்டு வந்தாக் கூட இந்திய தொலைக்காட்சி சீரியல்களுக்கு இன்னமும் ஒரு விடிவுகாலம் வந்த பாடில்லை. சீரியல் என்றாலே அதில் மாமியார் மருமகள் சண்டை இல்லாம இருப்பதில்லை.
உண்மையில் சொல்லப்போனால் இந்த தொடர்களின் தாக்கம் பல பெண்களுடைய வாழ்க்கையிலும் இருக்கத்தான் செய்கிறது. சில வீடுகளில் சண்டையே இல்லாவிட்டாலும் கூட நம் இந்திய சீரியல்களே மாமியார் மருமகளுக்கு இடையே சண்டையை மூட்டி விட காரணமாகின்றன. நம் இந்திய சீரியல்களில் பெண்கள் தான் வில்லிகள்.

கொடுமைப்படுத்தும் மாமியாருக்கு எப்படி ஆப்பு வைப்பது, வீட்டில் ஆதிக்கம் செய்யும் மருமகளை எப்படி தட்டி வைப்பது இது போன்ற கதை தான் தொடர்களில் அதிகமாக காட்டப்படுகின்றன. மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே ஒரு அப்பாவி ஜீவனாகவும் அம்மாவுக்கும் சப்போர்ட் பண்ண முடியாம இங்கிட்டு பொண்டாட்டிக்கும் சப்போர்ட் பண்ண முடியாம நடுவில தவிக்கும் ஆணாக இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள்.
இன்றைய கால சீரியல்கள் முழுக்க முழுக்க குடும்ப வன்முறையை வெளியே கொண்டு வரும் ஒன்றாக தெரிந்தால் கூட உண்மையில் இந்த சீரியல்கள் தான் குடும்பங்களில் பல தவறான புரிதல்களுக்கு வழி வகுக்கிறது.
குடும்ப சீரியல்கள் எப்படி மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே பிரச்சினை வர காரணமாகிறது?
சீரியல் மூலம் பெறும் ஐடியாக்கள்
குடும்ப சீரியல்கள் ஒரு குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக குடும்பத்தில் எப்படி எல்லாம் குழப்பத்தை உண்டு பண்ணலாம் போன்ற ஐடியாக்களை விட்டுச் செல்கிறது. பெண்கள் இந்த மாதிரியான சீரியல்களை பார்க்கும் போது தங்களை அந்த கேரக்டராக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இதுவே அவர்கள் தங்கள் ரியல் வாழ்க்கையிலும் அதை பின்பற்ற காரணமாக அமைகிறது. இதுவே பல வீடுகளில் மாமியார் மற்றும் மருமகள் பிரச்சினைகளுக்கு வித்தாக அமைந்து விடுகிறது.
அபத்தமான சீரியல் கதைகள்
குடும்ப தொடர்கள் சமுதாயத்தில் முக்கிய பங்கை வகிப்பதற்கு பதிலாக அபத்தமான கதையை காட்டி விட்டுச் செல்கிறது. பெரும்பாலான சீரியல்கள் மாமியாரை எப்படி பழி வாங்குவது, மருமகளை எப்படி பழி வாங்குவது, மகனை எப்படி தன் சொல் பேச்சு கேட்க வைப்பது இது போன்ற கதைகளை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படுகிறது. பொழுதுபோக்கு என்ற பெயரில் மற்றவர்களுக்கு எதிராக எப்படி சதி செய்வது போன்ற விஷயங்களைத் தான் குடும்ப தொடர்கள் செய்கின்றன.
குடும்ப சீரியல் ஒரு போதையை உண்டாக்குகிறது
குடும்ப சீரியல் பெண்களுக்கு ஒரு பேதை என்றே கூறலாம். நிறைய வீடுகளில் கணவனுக்கு சமைக்காமல் கூட சீரியல் பார்க்கும் கொடுமைகள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு முக்கிய காரணம் மாமியாருக்கும் மருமகளுக்கும் ஏற்படும் பிரச்சினைகளை வெளிப்படையாக தீர்த்து வைக்க இங்கே முடிவதில்லை. பெண்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்த முடியாத நிலையில் அதை சீரியல்கள் வழியாக பார்க்கும் போது அதற்கு எளிதாக அடிமையாகி விடுகிறார்கள்.
சீரியல்கள் உள்ள கேரக்டர்களாகவே மாறி அந்த மருமகளுக்கு என்ன ஆகிவிடுமோ அவள் மாமியார் ஏன் அப்படி செய்கிறார் இது போன்று கவலைப்படத் தொடங்கி விடுகிறார்கள். எனவே குடும்ப தொடர்கள் பெண்களை அடிமையாக்கத் தான் முயற்சிக்கிறதே தவிர அவர்களுக்கு நல்ல எண்ணங்களை கொடுக்க தவறிவிடுகிறது.
குடும்ப தொடர்கள் மாமியார்களை பழமை வாய்ந்தவர்களாக காட்டுகிறது
இப்பொழுது நிறைய மாமியார்கள் தங்கள் மருமகளை நன்றாக நடத்தும் குணத்தோடு இருக்கிறார்கள். ஆனால் இந்த குடும்ப தொடர்கள் இன்றளவும் மாமியார்களை பழமை வாதிகளாகவே காட்டுகிறது. மருமகளை வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு உபசரணம் செய்ய வேண்டும், சடங்கு சம்பிரதாயங்களை மதிக்க வேண்டும் இது போன்ற விஷயங்களையே அதிகமாக எடுத்துரைக்கிறது. ஆனால் உண்மையில் நிறைய மாமியார்கள் படித்து நிறைய மாடர்ன் எண்ணங்களுடன் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சிறிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் மக்கள் முன்னோக்கி இல்லை
குடும்ப தொடர்கள் இன்றளவும் சிறிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் தாக்கத்தை ஏற்படத்தான் செய்கிறது. கிராமம் மற்றும் சிறிய நகர்ப்புறங்களில் மக்கள் தங்கள் சிந்தனையில் முன்னோக்கி இருப்பதில்லை. நம் சமூகத்தில் எல்லா வகையான மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றளவும் மருமகள் சேலை தான் கட்ட வேண்டும், மாடர்ன் உடைகள் அணியக் கூடாது, மாதவிடாய் காலங்களில் பூஜை அறை அல்லது வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை.
அதே மாதிரி மருமகளும் மாமியாரை கொடுமைப்படுத்துவது போன்ற பழமை வாய்ந்த விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது. இந்த பழமைவாத விஷயங்களில் நம் குடும்ப தொடர்கள் கூடுதல் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது என்பது உண்மையே.



Click it and Unblock the Notifications