பெண்களே! உங்க கணவரிடம் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப நீங்க பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கீங்களாம்!

உங்கள் கணவர் உங்களுக்குள் உள்ள தவறுகளையும் நீங்கள் செய்யும் தவறான செயல்களையும் கண்டுபிடிக்க முயற்சிப்பார். நீங்கள் என்ன செய்தாலும் அவரை எரிச்சலூட்டும். நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் பற்றி புகார் செய்வார்.

உங்கள் கணவர் எப்பொழுதும் ஏதோ ஒரு காரணத்தால் எரிச்சலாகவோ, கவலையாகவோ மற்றும் விரக்தியுடனோ இருக்கிறாரா? ஆம். எனில், இதற்கு மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் சமநிலையின்மை, கோபம் போன்ற காரணங்கள் இருக்கலாம். இந்த எதிர்மறையான நடத்தைகள் யாரையும் மிகவும் விரக்தியடையச் செய்யலாம். அது தம்பதிகளின் வாழ்க்கை மற்றும் உறவுகளை நேரடியாகப் பாதிக்கலாம். கூடுதல் மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக உங்கள் கணவர் மிகவும் சோர்வாக உணரலாம். ஆதலால், உங்கள் கணவர் துயர்மிகு மற்றும் மோசமான கணவர் நோயால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

what-is-miserable-husband-syndrome-and-how-does-it-affect-your-marriage-in-tamil

துன்பகரமான கணவர் நோய் அறிகுறி என்றால் என்ன? அது உங்கள் திருமணத்தை எவ்வாறு பாதிக்கிறது? இதை எதிர்த்துப் போராட, இந்த நோய்க்குறியின் முக்கிய காரணங்கள் என்ன என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மோசமான கணவர் நோய்க்குறிக்கு என்ன காரணம்?

மோசமான கணவர் நோய்க்குறிக்கு என்ன காரணம்?

உங்கள் கணவருக்கு வயதாகும்போது டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும். இது மோசமான மற்றும் துயர்மிகு கணவர் நோயின் முக்கிய அறிகுறியாகும். வேலை அழுத்தம், நிதி சிக்கல்கள், உறவுகளில் உள்ள பிரச்சனைகள் போன்ற பிற காரணங்கள் உங்கள் கணவரை மிகவும் பாதிக்கலாம். அவர் உறவில் மகிழ்ச்சியாக இல்லாமல் இருக்கலாம் அல்லது அவரை உடைக்கக்கூடிய சில உணர்ச்சிகளால் அவர் பயமாக உணரலாம்.

திருமணத்தை எவ்வாறு பாதிக்கிறது?

திருமணத்தை எவ்வாறு பாதிக்கிறது?

மிஸரபிள் ஹஸ்பண்ட் சிண்ட்ரோம் என்பது திருமண தோல்விக்கு அதிகம் அறியப்படாத காரணங்களில் ஒன்றாகும். உங்கள் கணவர் மனநிலை சரியில்லாமல் இருக்கும்போது, எல்லா நேரங்களிலும் உங்களிடம் கத்தினால், உங்கள் கணவரிடம் உங்கள் உணர்வுகளைத் தெரிவிப்பது மிகவும் கடினமாக இருக்கும். இறுதியில், நீங்கள் திருமண உறவில் ஒதுக்கப்பட்டதாக உணருவீர்கள். மேலும் உங்கள் கணவரின் உணர்வுகளையும் பிரச்சனைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாததால், அது ஒரு சுமையாகவும் உணரலாம். ஒரு திருமண உறவில் மிகுந்த மௌனம் நிலவும்போது, இருவருமே ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ள முடியாமல் போனால், அந்த உறவு முடிந்துவிடும். உங்கள் கணவருக்கு இந்த நோய்க்குறி இருக்கலாம் என்பதைக் குறிக்கும் சில அறிகுறிகளை இங்கே காணலாம்.

உங்கள் செயல்களில் அவர் தவறுகளைக் கண்டுபிடிப்பார்

உங்கள் செயல்களில் அவர் தவறுகளைக் கண்டுபிடிப்பார்

உங்கள் கணவர் உங்களுக்குள் உள்ள தவறுகளையும் நீங்கள் செய்யும் தவறான செயல்களையும் கண்டுபிடிக்க முயற்சிப்பார். நீங்கள் என்ன செய்தாலும் அவரை எரிச்சலூட்டும். நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் பற்றி புகார் செய்வார். நீங்கள் செய்யும் எதுவும் அவரை திருப்திப்படுத்தாது அல்லது மகிழ்ச்சியாக உணர மாட்டார்.

உங்களை புறக்கணிக்கிறார்

உங்களை புறக்கணிக்கிறார்

அவர் உங்களிடம் கவனம் செலுத்தத் தவறினால், தொடர்ந்து உங்களைப் புறக்கணித்தால், உங்கள் கணவர் துயர்மிகு கணவர் நோய்க்குறியால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான முக்கிய அறிகுறியாகும். உங்கள் முயற்சிகள் இருந்தபோதிலும், அவர் உங்களுக்கு பதிலளிப்பதையோ அல்லது உங்கள் தேவைகளை கவனிப்பதையோ தவிர்க்கலாம்.

பெரும்பாலும் உங்களுடன் வாதிடுகிறார்

பெரும்பாலும் உங்களுடன் வாதிடுகிறார்

உங்கள் கணவர் மிகவும் விரக்தியடையும் போது, அவர் உங்கள் மீதான விரக்தியை அகற்றுவதற்காக உங்களுடன் வாதிடுவார். உரையாடல்கள் வாதங்களாக மாறும், பெரிய சண்டையாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. மேலும் அவர் உங்களைத் தாக்குவதற்கான வழிகளைத் தேடுவார். அந்த நேரம் நீங்கள் அவரை திருமணம் செய்தது தவறு என்று தோன்றலாம்.

எதிர்காலத்தைப் பற்றி பேசுவதைத் தவிர்க்கிறார்

எதிர்காலத்தைப் பற்றி பேசுவதைத் தவிர்க்கிறார்

இந்த நோய்க்குறியால் பாதிக்கப்படும்போது, உங்கள் கணவர் எதிர்காலத்தைப் பற்றி பேசுவதைத் தவிர்ப்பார். திருமணமான தம்பதிகள் தங்கள் எதிர்காலத்தைப் பார்த்து திட்டமிடுவது மிகவும் இயல்பானது மற்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உங்கள் கணவர் இதைத் தவிர்க்க முயற்சித்தால், சாத்தியமான எல்லா வழிகளிலும் தலைப்பைத் திசைதிருப்பினால், நீங்கள் அவருடன் தீவிரமாக உரையாட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, November 7, 2022, 18:43 [IST]
Desktop Bottom Promotion