Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
பெண்களே! திருமணமான ஆண்களோட டேட்டிங் போறீங்களா? அப்ப இந்த ஆபத்துக்களை நீங்க சந்திப்பீங்களாம்!
திருமணம் ஆனவர் எவ்வளவு பெரிய குற்றவாளியாக மற்றும் தவறானவராக இருந்தாலும், காண்பர்வர்கள் உங்களை 'வீட்டைக் கெடுப்பவர்' என்று எளிதில் சொல்லி விடுவார்கள்.
டேட்டிங் செல்வது ஆண், பெண் உறவில் சாதாரணம். ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும், தெரிந்துகொள்ளவும் உதவும். ஆனால், திருமணமான ஒருவருடன் நீங்கள் டேட்டிங் செல்வது சரியானதா என்று தோன்றலாம். சில நேரங்களில் இது போன்ற விவகாரங்களில் பங்கேற்பது சரியானது அல்ல என்று உங்களை நீங்கள் நம்ப வைக்க வேண்டும். இவை அனைத்தும் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் ஆரம்பத்தில் சிலிர்ப்பாக இருக்கலாம். ஆனால் திருமணமான ஆணுடன் தொடர்பு கொள்வது ஒழுக்கக்கேடானது மட்டுமல்ல, சற்று ஆபத்தானதும் கூட என்று கூறப்படுகிறது. கணவனின் விவகாரத்தை அறிந்தவுடன் மனைவி இந்த விஷயத்தில் நுழையும் வரை இது வேடிக்கை மற்றும் விளையாட்டுகளாக இருக்கலாம்.

மேலும் பெரும்பாலான சமயங்களில் மனைவி, தன் கணவன் செய்யும் தவறை சுட்டிக்காட்டாமல் 'வேறொரு பெண்ணை' எளிதில் குற்றம் சாட்டிவிடுகிறாள். ஆனால் நீங்கள் இந்த பெண்களில் ஒருவராக இருந்தால், சில எச்சரிக்கை விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். திருமணமான ஒருவருடன் டேட்டிங் செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பொய் சொல்ல வேண்டியிருக்கும்
நீங்கள் திருமணமான ஒரு மனிதருடன் டேட்டிங் செய்யும் போது, உறவின் ஒவ்வொரு இடத்திலும் நீங்கள் பொய் சொல்ல வேண்டியிருக்கும். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரிடம் இருந்து உங்கள் விவகாரத்தை மூடிமறைக்க நீங்கள் பொய் சொல்லலாம். மேலும், திருமணமான ஒருவருடன் டேட்டிங் செய்வதால் உங்களுக்கு இந்த செயல் குற்ற உணர்வை ஏற்படுத்தலாம். இதற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களை உடனடியாக விமர்சிப்பார்கள்.

உங்கள் மீது குற்றம் சுமத்தப்படும்
திருமணம் ஆனவர் எவ்வளவு பெரிய குற்றவாளியாக மற்றும் தவறானவராக இருந்தாலும், காண்பர்வர்கள் உங்களை 'வீட்டைக் கெடுப்பவர்' என்று எளிதில் சொல்லி விடுவார்கள். அவர் தனது திருமணம் வாழ்க்கை எவ்வளவு மோசமானது என்றும் மற்றும் அவரின் கசப்பான அனுபவங்களை உங்களுக்குச் சொன்னாலும், ஆனால் உங்களைச் சந்திப்பதற்கு முன்பே, உங்களால் தான் கணவன், மனைவி இருவருக்கும் இடையே விரிசல் ஏற்படுத்தியதாக மற்றவர்கள் கருதுவார்கள்.

கொடூரமான அறியாமை
திருமணமான ஒருவருடன் டேட்டிங் செய்வதில் உள்ள பல ஆபத்துகளில் ஒன்று, மற்றவர்கள் உங்களை விட்டு மெதுவாக விலகிவிடுவார்கள். ஏனென்றால் திருமணமான ஒருவருடன் டேட்டிங் செய்யும் உங்கள் இலட்சியங்களை பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் உணர்வுகளைப் பற்றி மற்றவர்களுடன் பேச நீங்கள் மேலும் போராடுவீர்கள். ஏனென்றால் யாரும் உங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்கள்.

கட்டுப்பாடுகள்
அவர் மீதான உங்கள் அன்பை வெளிப்படுத்தும் போது நீங்கள் எப்போதும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவருடைய மனைவி அல்லது வேறு யாரிடமாவது மாட்டிக் கொள்வார்களோ என்ற பயம் இருப்பதால், நீங்கள் எந்த நேரத்திலும் அவரை அழைக்கவோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பவோ முடியாது. நீங்கள் இருவரும் அவரது வீட்டிற்கு அருகிலோ அல்லது பொது இடங்களிலோ பார்க்க முடியாது. நீங்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் மட்டுமே சந்திக்க முடியும். மேலும் இந்த சுயக்கட்டுப்பாடு உங்களுக்கு அதிக பாதிப்பை கொடுக்கலாம்.

சுற்றிலும் கிசுகிசுக்கள்
தெரிந்தவர்கள்,சுற்றத்தார் மற்றும் நண்பர்கள் என அனைவரும் உங்களைப் பற்றி தவறாக பேசுவார்கள். நீங்கள் எந்த விருந்துக்குச் சென்றாலும் கிசுகிசுக்களின் மையமாக நீங்கள் எப்போதும் இருப்பீர்கள். ஏனென்றால் 'திருமணமான ஆணுடன் டேட்டிங் செய்யும் பெண்' பற்றி மற்றவர் பேசுவதை நிறுத்த மாட்டார்கள். வதந்திகள் மற்றும் வதந்திகளின் சரத்தைத் தொடங்க அந்த ஒரு விசயம் போதுமானது. மேலும் ஒவ்வொரு முறையும் பலர் தவறாக பேசுவார்கள், இது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications