Latest Updates
-
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா?
மாதவிடாய்க்கு பிறகு தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதிகளின் கவனத்திற்கு!
சராசரியாக 45 - 50 வயதில் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்றுவிடும். இதற்கு பிறகு தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சரியா? அல்லது மாதவிடாய் நின்ற பிறகு பெண்கள் உறவில் ஈடுபட விரும்புவார்களா? இல்லையா? அவரது மனநிலை மற்றும் உடல்நிலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலும், மாதவிடாய் நின்ற பிறகு உறவில் ஈடுபடுவது பெண்களுக்கு வலி மிகுந்ததாக இருக்கும். அவர்களால் முன்பு போல உறவில் ஈடுபட முடியாது. ஏனெனில், அவர்களுக்கு வலி அதிகமாக ஏற்படும். எனவே, மாதவிடாய் நின்ற பிறகு தாம்பத்திய உறவில் ஈடுபடுபவர்கள் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்....

செய்திகூறு # 1
மாதவிடாய் முற்றிலுமாக நின்ற பிறகு பெண்களுக்கு உணர்ச்சியின் அளவு குறைந்திருக்கும். அவர்களுக்கு உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற தூண்டுதல் குறைந்திருக்கும். மேலும், உறவில் ஈடுபட்டாலும் முந்தைய அளவிற்கு அவர்களால் இன்பம் காண இயலாது.

செய்திகூறு # 2
வலி மிகுந்த உடலுறவு! மேலும், மாதவிடாய் முடிந்த பிறகு உறவில் ஈடுபடும் போது, சில பெண்கள் மிகுந்த வலியை உணர்வதாக கூறுகின்றனர்.

செய்திகூறு # 3
மாற்று வழிகள்! உறவில் ஈடுபட உணர்சிகளை தூண்ட என்ன மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் கூட, அவை பெரியதாக பயனளிக்காது என மாதவிடாய் முடிந்த பெண்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

செய்திகூறு # 4
மாதவிடாய் நின்ற பிறகு உறவில் ஈடுபடுவதால் பெண்களுக்கு, தூக்கமின்மை, மன அழுத்தம், ஆரோக்கியப் பிரச்சனைகள், சிறுநீர் கட்டுப்படுத்துவதில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் எழுகின்றன.

செய்திகூறு # 5
அப்படியும், நீங்கள் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று எண்ணினால், முதலில் அவர்களுக்கு உணர்ச்சியை தூண்டும் வண்ணம் செய்த பிறகு ஈடுபடுவது நல்லது. இல்லையேல் கண்டிப்பாக அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிக வலியை உணர்வார்கள்.

செய்திகூறு # 6
நிபுணர்கள், மாதவிடாய் நின்ற பிறகு உறவில் ஈடுபடும் தம்பதிகள், முதலில் ஃபோர்ப்ளேவில் ஈடுபடுவதால் பெண்களை உணர்ச்சி ரீதியாக மேலோங்க வைக்க முடியும் என தெரிவிக்கின்றனர்.

செய்திகூறு # 7
மேலும், மாதவிடாய் முடிந்த பிறகு தாம்பத்யத்தில் ஈடுபடும் ஆண்கள், முதலில் உங்கள் துணையிடம் அவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள், அவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் என்னென்ன என்று தெரிந்துக் கொள்ள வேண்டும்.

செய்திகூறு # 8
பெண்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் மாதவிடாய் நின்ற பிறகு உறவில் ஈடுபடுவது சிரமமற்றதாக இருக்கும். மேலும், இது ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை சீராக்கும் எனவும் கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications