Latest Updates
-
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
முதலிரவு சார்ந்த கட்டுக்கதைகளும், ஐயங்களும்!!!
ஓர் தலைமுறைக்கான விதை தான் திருமணம். அதை, முறையே ஆரம்பிக்கவே முதலிரவை முதல் சடங்காக வைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். ஆனால், அவர்கள் கூறிய பல விஷயங்கள் காலப்போக்கில் மருவிக் கட்டுக்கதைகளாக மாறிவிட்டன.
உடலுறவில் பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடையாமல் இருப்பதற்கான காரணங்கள்!!!
இவ்வாறு மருவியவை யாவும் இப்போது அர்த்தமற்ற புரளிகளாக உலாவி வருகின்றன. இது, வாழ்கையைத் தொடங்கும் இளசுகளின் மனதில் வீணான ஐயத்தை விதைக்கிறது என்பது மட்டும் தான் உண்மை.
உடலுறவில் திளைத்து முழு இன்பமடைய உதவும் வழிமுறைகள்!!!
ஊருக்குள் இப்போது புரளியாக பரவி வரும் அந்த கட்டுக்கதைகள் எத்தனை அளவு உண்மை என்று இனிக் காண்போம்....

உடலுறவு
உடலுறவு என்பது இருவருக்குள்ளும் ஓர் உடன்பாடுடன் நடக்க வேண்டிய விஷயமாகும். முதலிரவிலேயே உடலுறவுக் கொள்ள வேண்டும் என்பது எல்லாம் கிடையாது. பெரியோர், பெற்றோர் வேண்டுமானாலும் அவ்வாறுக் கூறலாம். ஆனால், இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்துக் கொண்டு உடலுறவு வைத்துக் கொள்வது தான் சிறந்ததாக இருக்கும்.

உச்சகட்டம்
உடலுறவுக் கொள்வதற்கான உணர்வும், உச்சநிலையும் இருவருக்குள்ளேயும் நேரிடம் தருணம் அதுவாக ஏற்பட வேண்டும். அதை உங்களது சூழல் தான் ஏற்படுத்தும். அனைவரும் முதலிரவிலேயே உச்சம் காண்பார்கள் என்பது எல்லாம் வெறும் கட்டுக்கதை. ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ளாமல் உடலுறவுக் கொள்வதே சிரமம். இதில் எப்படி எடுத்த எடுப்பிலேயே உச்சம் காண முடியும்.

போலியான இன்பம்
போலித்தனமாக உச்சம் அடைவது போல நடிக்க தேவை இல்லை. அதற்கான நாள் வரும் வரைக் காத்திருங்கள். உணர்வுகள் அதுவாக மலரும் வரும் காத்திருப்பது தான் சரியானது.

உடலுறவுக் குறித்து பேசுதல்
மனம் திறந்து உடலுறவைப் பற்றி பேசு என்று கூறுவார்கள், எடுத்த முதல் சந்திப்பிலேயே உடலுறவுப் பற்றி ஓர் பெண்ணிடம் பேசுவது அவ்வளவு சரியாக இருக்காது. முதலில் அவளைப் பற்றி அறிந்துக் கொள்ளுங்கள். நன்கு தெரிந்துக் கொண்ட பின், உடலுறவு தானாக நடைபெறும்.

ஆண் தான் தொடங்க வேண்டும்
முதலிரவில் ஆண் தான் முதலில் தொடங்க வேண்டும் என்பார்கள். அப்படி எல்லாம் ஏதும் இல்லை. இது என்ன கடை திறப்பு விழாவா? உங்களுக்குள் காதல் மலரும் போது, அதுவே உடலுறவை உங்களுக்கு பரிசளிக்கும். தேடி செல்வதை விட தானாக அமைவது தான் உங்களை திருப்திப் படுத்தும்.



Click it and Unblock the Notifications