முதலிரவு சார்ந்த கட்டுக்கதைகளும், ஐயங்களும்!!!

By John

ஓர் தலைமுறைக்கான விதை தான் திருமணம். அதை, முறையே ஆரம்பிக்கவே முதலிரவை முதல் சடங்காக வைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். ஆனால், அவர்கள் கூறிய பல விஷயங்கள் காலப்போக்கில் மருவிக் கட்டுக்கதைகளாக மாறிவிட்டன.

உடலுறவில் பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடையாமல் இருப்பதற்கான காரணங்கள்!!!

இவ்வாறு மருவியவை யாவும் இப்போது அர்த்தமற்ற புரளிகளாக உலாவி வருகின்றன. இது, வாழ்கையைத் தொடங்கும் இளசுகளின் மனதில் வீணான ஐயத்தை விதைக்கிறது என்பது மட்டும் தான் உண்மை.

உடலுறவில் திளைத்து முழு இன்பமடைய உதவும் வழிமுறைகள்!!!

ஊருக்குள் இப்போது புரளியாக பரவி வரும் அந்த கட்டுக்கதைகள் எத்தனை அளவு உண்மை என்று இனிக் காண்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலுறவு

உடலுறவு

உடலுறவு என்பது இருவருக்குள்ளும் ஓர் உடன்பாடுடன் நடக்க வேண்டிய விஷயமாகும். முதலிரவிலேயே உடலுறவுக் கொள்ள வேண்டும் என்பது எல்லாம் கிடையாது. பெரியோர், பெற்றோர் வேண்டுமானாலும் அவ்வாறுக் கூறலாம். ஆனால், இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்துக் கொண்டு உடலுறவு வைத்துக் கொள்வது தான் சிறந்ததாக இருக்கும்.

உச்சகட்டம்

உச்சகட்டம்

உடலுறவுக் கொள்வதற்கான உணர்வும், உச்சநிலையும் இருவருக்குள்ளேயும் நேரிடம் தருணம் அதுவாக ஏற்பட வேண்டும். அதை உங்களது சூழல் தான் ஏற்படுத்தும். அனைவரும் முதலிரவிலேயே உச்சம் காண்பார்கள் என்பது எல்லாம் வெறும் கட்டுக்கதை. ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ளாமல் உடலுறவுக் கொள்வதே சிரமம். இதில் எப்படி எடுத்த எடுப்பிலேயே உச்சம் காண முடியும்.

போலியான இன்பம்

போலியான இன்பம்

போலித்தனமாக உச்சம் அடைவது போல நடிக்க தேவை இல்லை. அதற்கான நாள் வரும் வரைக் காத்திருங்கள். உணர்வுகள் அதுவாக மலரும் வரும் காத்திருப்பது தான் சரியானது.

 உடலுறவுக் குறித்து பேசுதல்

உடலுறவுக் குறித்து பேசுதல்

மனம் திறந்து உடலுறவைப் பற்றி பேசு என்று கூறுவார்கள், எடுத்த முதல் சந்திப்பிலேயே உடலுறவுப் பற்றி ஓர் பெண்ணிடம் பேசுவது அவ்வளவு சரியாக இருக்காது. முதலில் அவளைப் பற்றி அறிந்துக் கொள்ளுங்கள். நன்கு தெரிந்துக் கொண்ட பின், உடலுறவு தானாக நடைபெறும்.

ஆண் தான் தொடங்க வேண்டும்

ஆண் தான் தொடங்க வேண்டும்

முதலிரவில் ஆண் தான் முதலில் தொடங்க வேண்டும் என்பார்கள். அப்படி எல்லாம் ஏதும் இல்லை. இது என்ன கடை திறப்பு விழாவா? உங்களுக்குள் காதல் மலரும் போது, அதுவே உடலுறவை உங்களுக்கு பரிசளிக்கும். தேடி செல்வதை விட தானாக அமைவது தான் உங்களை திருப்திப் படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, April 11, 2015, 13:40 [IST]
Desktop Bottom Promotion