Latest Updates
-
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா?
அதீத இச்சை உணர்வு கொண்டுள்ள ஆண்கள் உறவில் செயல்படுத்தும் 3 மைன்ட் கேம்ஸ்!
உடலுறவு சார்ந்த அதிக ஆர்வம் கொண்டுள்ள ஆண்கள் உறவில் செயல்படுத்தும் மைன்ட் கேம்ஸ் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
நமது நட்பு வட்டாரத்திலேயே இப்படி ஒரு நபரை பார்க்க முடியும். தன்னை தானே பெருமைப்படுத்தி பேசுவார்கள், தங்கள் மீது ஈர்ப்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக எல்லாமே தங்களுக்கு தெரியும் என்பதை காட்டிக்கொள்ள முயற்சி செய்வார்கள்.
இவர்கள் எண்ணம் முழுக்க ஒருவரை வசீகரிக்க வேண்டும், தான் தான் அனைத்தும் அறிந்த நபர் என்ற பிம்பத்தை உண்டாக்க வேண்டும் என்பதில் மட்டும் தான் இருக்கும்.
இப்படி ஒரு பிம்பத்தை ஒரு உறவில் உருவாக்க ஆண்கள் இதுபோன்ற மைன்ட் கேம்ஸ் எல்லாம் செய்வார்கள் என்பது குறித்து இங்கு காணலாம்...

வீண்பெருமிதத்துக்குரிய உணர்வு!
இந்த உலகில் தாங்கள் இல்லாமல் ஏதும் நடக்காது என நம்புவார்கள். உங்களையும் நம்ப வைப்பார்கள். தங்களை தாங்களே மிக பெருமையாக கூறிக் கொள்வார்கள்.

விரிவாக்கம்!
எங்கு போனோம், என்ன செய்தோம், என்ன வாங்கினோம், யாருடன் இருந்தோம் என்பதை மிக பகட்டாக கூறிக் கொள்வார்கள். இது ஒருவிதமான எரிச்சலை உண்டாக்கும். இப்படி கூறுவதால் தங்களை மற்றவர்கள் வாய் பிளந்து வியப்பாக பார்ப்பார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் மிகுதியாக இருக்கிறது.

பச்சாதாபம்!
உப்பு அளவிற்கு கூட பச்சாதாபம், அனுதாபம், அக்கறை காட்ட மாட்டார்கள். இப்படி நடந்துக் கொள்வதால் தாங்கள் அனுதாபம் தேடுபவர்களை அவர்களாக முயற்சிக்க முனைகிறோம் என்ற கருத்தை வேறு முன் வைப்பார்கள்.

எடுத்துக்காட்டாக....
ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவரிடம் நல்ல வார்த்தை அல்லது அக்கறையாக பேசுவதை தவிர்த்து, அவரை பற்றி மற்றவரிடம், அவன் புகைத்து தள்ளினான் அதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதற்கெல்லாம் எதற்கு இரக்கம் என கூறுவார்கள்.

உடையக் கூடிய சுயமரியாதை!
தன்னம்பிக்கை, சுய மரியாதை என்ற பெயரில் மற்றவர்களை ஏளனமாக பார்ப்பார்கள். அவன் எல்லாம் அவ்வளவுதான், அவன அந்த அளவுல தான் வைக்கணும் என்பது போல பேசுவார்கள். தாங்கள் ஒரு விமர்சகர்கள், தாங்கள் விமர்சிக்கவே பிறந்தவர்கள் என கருதுவார்கள்.

உண்மையில் சற்று புத்திசாலிகளும் கூட...
அதீத ஆசை, இச்சை எண்ணம் கொண்டவர்கள் உண்மையில் புத்திசாலியாகவும், ஈர்ப்பாகவும் தான் இருப்பார்கள். அவர்களது பேச்சு மற்றவர்களை சுண்டியிழுக்கும். மற்றவர்கள் தங்கள் மீது ஈர்ப்பு கொள்வதற்காகவே.



Click it and Unblock the Notifications