Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
அதீத இச்சை உணர்வு கொண்டுள்ள ஆண்கள் உறவில் செயல்படுத்தும் 3 மைன்ட் கேம்ஸ்!
உடலுறவு சார்ந்த அதிக ஆர்வம் கொண்டுள்ள ஆண்கள் உறவில் செயல்படுத்தும் மைன்ட் கேம்ஸ் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
நமது நட்பு வட்டாரத்திலேயே இப்படி ஒரு நபரை பார்க்க முடியும். தன்னை தானே பெருமைப்படுத்தி பேசுவார்கள், தங்கள் மீது ஈர்ப்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக எல்லாமே தங்களுக்கு தெரியும் என்பதை காட்டிக்கொள்ள முயற்சி செய்வார்கள்.
இவர்கள் எண்ணம் முழுக்க ஒருவரை வசீகரிக்க வேண்டும், தான் தான் அனைத்தும் அறிந்த நபர் என்ற பிம்பத்தை உண்டாக்க வேண்டும் என்பதில் மட்டும் தான் இருக்கும்.
இப்படி ஒரு பிம்பத்தை ஒரு உறவில் உருவாக்க ஆண்கள் இதுபோன்ற மைன்ட் கேம்ஸ் எல்லாம் செய்வார்கள் என்பது குறித்து இங்கு காணலாம்...

வீண்பெருமிதத்துக்குரிய உணர்வு!
இந்த உலகில் தாங்கள் இல்லாமல் ஏதும் நடக்காது என நம்புவார்கள். உங்களையும் நம்ப வைப்பார்கள். தங்களை தாங்களே மிக பெருமையாக கூறிக் கொள்வார்கள்.

விரிவாக்கம்!
எங்கு போனோம், என்ன செய்தோம், என்ன வாங்கினோம், யாருடன் இருந்தோம் என்பதை மிக பகட்டாக கூறிக் கொள்வார்கள். இது ஒருவிதமான எரிச்சலை உண்டாக்கும். இப்படி கூறுவதால் தங்களை மற்றவர்கள் வாய் பிளந்து வியப்பாக பார்ப்பார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் மிகுதியாக இருக்கிறது.

பச்சாதாபம்!
உப்பு அளவிற்கு கூட பச்சாதாபம், அனுதாபம், அக்கறை காட்ட மாட்டார்கள். இப்படி நடந்துக் கொள்வதால் தாங்கள் அனுதாபம் தேடுபவர்களை அவர்களாக முயற்சிக்க முனைகிறோம் என்ற கருத்தை வேறு முன் வைப்பார்கள்.

எடுத்துக்காட்டாக....
ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவரிடம் நல்ல வார்த்தை அல்லது அக்கறையாக பேசுவதை தவிர்த்து, அவரை பற்றி மற்றவரிடம், அவன் புகைத்து தள்ளினான் அதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதற்கெல்லாம் எதற்கு இரக்கம் என கூறுவார்கள்.

உடையக் கூடிய சுயமரியாதை!
தன்னம்பிக்கை, சுய மரியாதை என்ற பெயரில் மற்றவர்களை ஏளனமாக பார்ப்பார்கள். அவன் எல்லாம் அவ்வளவுதான், அவன அந்த அளவுல தான் வைக்கணும் என்பது போல பேசுவார்கள். தாங்கள் ஒரு விமர்சகர்கள், தாங்கள் விமர்சிக்கவே பிறந்தவர்கள் என கருதுவார்கள்.

உண்மையில் சற்று புத்திசாலிகளும் கூட...
அதீத ஆசை, இச்சை எண்ணம் கொண்டவர்கள் உண்மையில் புத்திசாலியாகவும், ஈர்ப்பாகவும் தான் இருப்பார்கள். அவர்களது பேச்சு மற்றவர்களை சுண்டியிழுக்கும். மற்றவர்கள் தங்கள் மீது ஈர்ப்பு கொள்வதற்காகவே.



Click it and Unblock the Notifications











