Latest Updates
-
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா
அதீத இச்சை உணர்வு கொண்டுள்ள ஆண்கள் உறவில் செயல்படுத்தும் 3 மைன்ட் கேம்ஸ்!
உடலுறவு சார்ந்த அதிக ஆர்வம் கொண்டுள்ள ஆண்கள் உறவில் செயல்படுத்தும் மைன்ட் கேம்ஸ் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
நமது நட்பு வட்டாரத்திலேயே இப்படி ஒரு நபரை பார்க்க முடியும். தன்னை தானே பெருமைப்படுத்தி பேசுவார்கள், தங்கள் மீது ஈர்ப்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக எல்லாமே தங்களுக்கு தெரியும் என்பதை காட்டிக்கொள்ள முயற்சி செய்வார்கள்.
இவர்கள் எண்ணம் முழுக்க ஒருவரை வசீகரிக்க வேண்டும், தான் தான் அனைத்தும் அறிந்த நபர் என்ற பிம்பத்தை உண்டாக்க வேண்டும் என்பதில் மட்டும் தான் இருக்கும்.
இப்படி ஒரு பிம்பத்தை ஒரு உறவில் உருவாக்க ஆண்கள் இதுபோன்ற மைன்ட் கேம்ஸ் எல்லாம் செய்வார்கள் என்பது குறித்து இங்கு காணலாம்...

வீண்பெருமிதத்துக்குரிய உணர்வு!
இந்த உலகில் தாங்கள் இல்லாமல் ஏதும் நடக்காது என நம்புவார்கள். உங்களையும் நம்ப வைப்பார்கள். தங்களை தாங்களே மிக பெருமையாக கூறிக் கொள்வார்கள்.

விரிவாக்கம்!
எங்கு போனோம், என்ன செய்தோம், என்ன வாங்கினோம், யாருடன் இருந்தோம் என்பதை மிக பகட்டாக கூறிக் கொள்வார்கள். இது ஒருவிதமான எரிச்சலை உண்டாக்கும். இப்படி கூறுவதால் தங்களை மற்றவர்கள் வாய் பிளந்து வியப்பாக பார்ப்பார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் மிகுதியாக இருக்கிறது.

பச்சாதாபம்!
உப்பு அளவிற்கு கூட பச்சாதாபம், அனுதாபம், அக்கறை காட்ட மாட்டார்கள். இப்படி நடந்துக் கொள்வதால் தாங்கள் அனுதாபம் தேடுபவர்களை அவர்களாக முயற்சிக்க முனைகிறோம் என்ற கருத்தை வேறு முன் வைப்பார்கள்.

எடுத்துக்காட்டாக....
ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவரிடம் நல்ல வார்த்தை அல்லது அக்கறையாக பேசுவதை தவிர்த்து, அவரை பற்றி மற்றவரிடம், அவன் புகைத்து தள்ளினான் அதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதற்கெல்லாம் எதற்கு இரக்கம் என கூறுவார்கள்.

உடையக் கூடிய சுயமரியாதை!
தன்னம்பிக்கை, சுய மரியாதை என்ற பெயரில் மற்றவர்களை ஏளனமாக பார்ப்பார்கள். அவன் எல்லாம் அவ்வளவுதான், அவன அந்த அளவுல தான் வைக்கணும் என்பது போல பேசுவார்கள். தாங்கள் ஒரு விமர்சகர்கள், தாங்கள் விமர்சிக்கவே பிறந்தவர்கள் என கருதுவார்கள்.

உண்மையில் சற்று புத்திசாலிகளும் கூட...
அதீத ஆசை, இச்சை எண்ணம் கொண்டவர்கள் உண்மையில் புத்திசாலியாகவும், ஈர்ப்பாகவும் தான் இருப்பார்கள். அவர்களது பேச்சு மற்றவர்களை சுண்டியிழுக்கும். மற்றவர்கள் தங்கள் மீது ஈர்ப்பு கொள்வதற்காகவே.



Click it and Unblock the Notifications