Latest Updates
-
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
உங்க கடந்த காலத்துல நடத்த மோசமான விஷயங்கள மறக்க முடியாம இன்னும் கஷ்டப்படுறீங்களா? அப்ப இத பண்ணுங்க!
வாழ்க்கையில் தொடர்ந்து தோல்விகளை சந்திப்பவர்கள் அல்லது உறவில் தோல்வியடைந்தவர்கள் கடந்த காலத்திலேயே தேங்கி நின்றுவிடுகிறார்கள். நம்மில் பெரும்பலான மக்கள் பல மோசமான நினைவுகளை நினைத்து, வாழ்க்கையை மிகுந்த சிக்கலாக்கி கொண்டிருக்கிறார்கள்.
இந்த வாழ்க்கை நமக்கு பல்வேறு அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுத்தருகிறது. நம் அனைவருக்கும் கடந்த காலத்தில் சில மோசமான நினைவுகள் இருந்திருக்கலாம் அல்லது இல்லாமல் இருந்திருக்கலாம். நம் வாழ்வு என்பது நன்மை தீமைகள் சேர்ந்த ஓர் கூட்டுத்தொகை. நாம் அனைவரும் நம் வாழ்வில் மறக்க முடியாத சில மோசமான தருணங்களை சந்தித்திருக்கலாம்.

சிலர் அந்த பழைய நினைவுகளை கடந்து வந்துவிடுகிறார்கள். பலர் தங்கள் கடந்த கால நினைவுகளையே நினைத்துக்கொண்டு நிகழ்கால வாழ்க்கையை வாழ மறந்துவிடுகிறார்கள். நினைவுகளை விட்டுவிடுவது என்பது எளிதான காரியமல்ல. ஆனால், அவற்றை விட்டு வெளியேறுவதுதான் வாழ்க்கைக்கு நல்லது.
கடந்த காலத்தின் ஃப்ளாஷ்பேக்குகள் மீண்டும் மீண்டும் உங்களுக்கு வந்து செல்கிறதா? இதனால் மன அமைதியை இழந்து கஷ்டப்படுகிறீர்களா? ஆம். எனில், கெட்ட நினைவுகளை மறக்க உதவும் வழிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
மோசமான நினைவுகள்
வாழ்க்கையில் கடந்த மோசமான தருணங்களைப் பற்றிய எண்ணங்கள் தலைவலி, மன அழுத்தம், வியர்வை மற்றும் வயிற்று வலியை கூட ஏற்படுத்தும். மேலும் நம் உடலில் இருந்து அனைத்து சக்தியையும் வெளியேற்றும் மற்றும் மன நிம்மதியை சீர்குலைக்கும். வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை மாற்றுவதற்கும், நல்ல பழக்கங்களின் மூலம் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் நீங்கள்தான் முயற்சி செய்ய வேண்டும்.
கெட்ட நினைவுகளை எப்படி நிறுத்துவது?
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு உங்கள் முழு ஆற்றலையும் கவனத்தையும் செலுத்த வேண்டும். இதற்கு நீங்கள் ஒரு வளர்ச்சி மனப்பான்மையைக் கடைப்பிடிக்கலாம். வாழ்க்கை வழங்கும் அனைத்து அனுபவங்களுக்கும் ஏற்ற வகையில் உங்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம் அல்லது பாதிக்கப்பட்டவரின் மனநிலையின் சுழலில் கடந்த காலத்திலே தேங்கி நிற்க நீங்கள் தேர்வு செய்யலாம்.
இருப்பினும், காலம் எல்லாவற்றிற்கும் பதில் கூறும். மோசமான நினைவுகளை கடந்துவர காலம் உங்களுக்கு கைகொடுக்கும். உங்கள் மனநிலையிலும் பழக்கவழக்கங்களிலும் சிறிது மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம் கடந்த காலத்தை மறந்துவிடலாம்.
அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்
அனுபவங்கள் நமக்கு பல்வேறு விஷயங்களை கற்றுத்தருகின்றன. அது மோசமான அனுபவமாக இருந்தாலும், நல்ல அனுபவமாக இருந்தாலும் சரி, அவை உங்களுக்கு சில பாடங்களை கற்றுத்தரும். ஆனால், அந்த மோசமான அல்லது விரும்பத்தகாத அனுபவத்திலிருந்து விடைபெறுவது நல்லது. அதற்கு பதிலாக, நீங்கள் பல புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முயற்சி செய்யலாம். அவை உங்களை நிகழ்காலத்தில் இருக்க வைக்கும்.
இன்று உங்களிடம் உள்ளவற்றில் கவனம் செலுத்துங்கள்
கடந்த கால நினைவுகளை விட்டு நிகழ்காலத்திற்கு வாருங்கள். இன்று உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களின் மீது நீங்கள் கவனம் செலுத்தலாம். தற்போது உங்கள் வாழ்க்கையில் உள்ள நல்ல விஷயங்களை நோக்கி உங்கள் கவனத்தை செலுத்தலாம்.
உங்களுக்கு ஆதரவாக நின்று ஆதரவளித்தவர்களை நினைத்து பார்க்கலாம். காலப்போக்கில், வாழ்க்கையின் புதுமையான அனுபவங்கள் வெளிவரத் தொடங்கும் போது அந்த மோசமான நினைவுகள் மறையத் தொடங்கும்.
உணர்வுகளை உணர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்கள் உணர்வுகளை உணர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். மோசமான நினைவுகளுடன் தொடர்புடைய உணர்ச்சிகளை அங்கீகரிப்பதன் மூலம் தொடங்குங்கள். வருத்தம், கோபம், அழுகை அல்லது புண்படுவது போன்ற உணர்வுகள் ஏற்படுவது இயல்பானது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
எந்த தீர்ப்பும் முன்முடிவும் இல்லாமல் இந்த உணர்ச்சிகளை அனுபவிக்க உங்களை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு உணர்வது பரவாயில்லை என்பதையும், குணமடைவதற்கான முதல் படியை நீங்கள் எடுக்கிறீர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
சுய இரக்கத்தை பயிற்சி செய்யுங்கள்
உங்களை எப்போதும் நீங்கள் அன்பாக வைத்திருக்க வேண்டும். எல்லோரும் தவறு செய்கிறார்கள் மற்றும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று நினைக்க வேண்டாம்.
உங்களை இரக்கத்துடன் நடத்துங்கள் மற்றும் சுய பழியைத் தவிர்க்கவும். நிறைவான வாழ்க்கையை வாழ நீங்கள் முன்னேறத் தகுதியானவர் என்பதை நினைவூட்டுங்கள். வாழ்க்கையில் இன்பம், துன்பம் இரண்டையும் சமாளிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
ஆதரவைத் தேடுங்கள்
நம்பகமான நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய சிகிச்சையாளருடன் தொடர்பு கொள்ளுங்கள். வழிகாட்டுதல் மற்றும் பச்சாதாபம் வழங்கக்கூடிய ஒருவருடன் உங்கள் அனுபவத்தைப் பற்றி பேசுவது மிகவும் உதவியாக இருக்கும். அப்படி பேசும்போது, அவர்கள் ஒரு புதிய கண்ணோட்டத்தை உங்களுக்கு வழங்க முடியும் மற்றும் உங்கள் குணப்படுத்தும் பயணத்தை ஆதரிக்க முடியும்.



Click it and Unblock the Notifications












