Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
ஆண்களே! உங்க மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் முக்கியமான காரணமாம்... ஷாக் ஆகாம படிங்க!
பல பெண்கள் தங்கள் துணையிடம் பாலியல் ரீதியாக ஈர்க்கப்படாமல் இருக்கும்போது ஏமாற்ற தொடங்குகிறார்கள். தம்பதிகள் இருவருக்கும் இடையேயான புரிதல் இல்லாததற்கு பாலியல் ஆசை மற்றும் தேவையை மக்கள் உண்மையில் அடையாளம் காணவில்லை.
இன்றைய நாளில் பெரும்பாலான தம்பதிகளிடையே உறவு மற்றும் பாலியல் விருப்பம் குறித்து பல விஷயங்கள் ஒத்துப்போவதில்லை. பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலையால் பல தம்பதிகள் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள். பெரும்பாலும் கள்ள உறவில் ஈடுபடுவது ஆண்களே என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், பெண்களை விட ஆண்களே அதிகம் ஏமாற்றுகிறார்கள் என்ற கட்டுக்கதை சமீப காலமாக பொய்யாகி வருகிறது. ஆம், ஆண்களைப் போலவே பெண்களும் உறவுகளில் ஏமாற்றுகிறார்கள். வேறொரு நபருடன் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள். இந்த சூழலில் ஏமாற்றுவதற்கான காரணங்கள் வரும் நாட்களில் மிகவும் ஒத்ததாகி வருகின்றன.

இருப்பினும், பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் துரோகத்தில் ஈடுபடுவதற்கான டாப் காரணங்கள் உள்ளன. எந்த வகையான சூழ்நிலையிலும் அவை பட்டியலில் முதலிடம் வகிக்கின்றன. அவை என்னென்ன காரணங்கள் என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

அன்பு இல்லாமை
பெண்கள் தங்கள் கணவனிடம் மிகக் குறைவாகவோ அல்லது அன்பு இல்லாமலோ இருக்கும்போது தங்கள் உறவுகளில் ஏமாற்ற தொடங்குகிறார்கள். அன்பு, கவனிப்பு மற்றும் புரிதல் இல்லாமை ஒரு பெண்ணை உறவிலிருந்து விலக வைக்கிறது. இதனால், அவர்கள் வேறொரு உறவில் அல்லது காதலில் ஈடுபட விரும்புகிறார்கள். இது நேர்மை, கவனம், கவனிப்பு இல்லாமை போன்ற காரணங்களால் ஏற்படும். இது பாலியல் மற்றும் உணர்ச்சி துரோகத்திற்கு கூட வழிவகுக்கும்.

பாலியல் ஆசை இல்லாமை
பல பெண்கள் தங்கள் துணையிடம் பாலியல் ரீதியாக ஈர்க்கப்படாமல் இருக்கும்போது ஏமாற்ற தொடங்குகிறார்கள். தம்பதிகள் இருவருக்கும் இடையேயான புரிதல் இல்லாததற்கு பாலியல் ஆசை மற்றும் தேவையை மக்கள் உண்மையில் அடையாளம் காணவில்லை. ஆனால் அது மிகவும் முக்கியமானது. பெண்கள் தங்கள் தற்போதைய உறவில் பெறாத பலவிதமான பாலியல் ஆசைகளை வேறொரு உறவில் பெற விரும்பலாம். எனவே, அவர்களது பாலியல் தேவைகளுக்காக உறவுக்கு வெளியே, வேறொரு உறவில் ஈடுபட விரும்புகிறார்கள்.

உறவுகளில் சிக்கிய உணர்வு
பெண்கள் தாங்கள் சிக்கியதாக உணரும் உறவுகளிலிருந்து வெளியேற வேறொரு உறவை தேட முனைகிறார்கள். அவர்கள் உண்மையில் இருப்பதை விட மதிப்பற்றவர்களாகவும் தகுதியற்றவர்களாகவும் உணரவைக்கும் கணவனுடன் இருக்க பெண்கள் விரும்பவில்லை. குறைந்த சுயமரியாதை போன்ற உணர்வு பெண்களை உறவுக்கு வெளியே அன்பையும் அக்கறையையும் தேட வைக்கும். அவர்கள் நேசிப்பதாக உணராதபோது, அவர்கள் யாரோ ஒருவருடன் உடலுறவு கொண்டாலும் அல்லது வெறுமனே ஒரு நபரின் இருப்பின் ஆறுதலாக இருந்தாலும், பதிலுக்கு அவர்களை நேசிக்கக்கூடியவர்களாக மாறுகிறார்கள்.

கோபம் அல்லது பழிவாங்கல்
பல பெண்கள் தங்கள் கணவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு உறவில் நுழைகிறார்கள். ஆனால், அந்த எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறாமல் அல்லது பொய்யாகும்போது, அவர்கள் சலிப்பையும் உறவின் மீது வெறுப்பையும் கொண்டுள்ளனர். தங்களின் ஒவ்வொரு தேவையையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும், வேறொரு உறவை நோக்கி அவர்கள் நகருகிறார்கள். சில பெண்கள் தங்கள் துணையின் கடந்த கால விவகாரம்( கள்ளத் தொடர்பு) போன்ற மற்றொரு காரணத்திற்காக தங்கள் துணையை வெறுப்படைய வைக்க, வேறொரு உறவை நோக்கி செல்லலாம். மேலும் தங்கள் சொந்த துரோகத்தை பதிலடியாக கொடுக்க, பெண்கள் கள்ள உறவில் ஈடுபட நினைக்கலாம்.

குறைந்த சுயமரியாதை
பெண்கள் தங்கள் உறவில் குறைந்த சுயமரியாதையை பெறும்போது, மன அழுத்தத்தைப் பெறுகிறார்கள். இந்த குறைந்த சுயமரியாதை அவர்களை துரோகம் செய்ய ஊக்குவிக்கும். தங்களை நன்றாக மதிக்கும் ஒரு புதிய நபருடன் உடலுறவு கொள்வது நேர்மறையான உணர்வுகளுக்கு வழிவகுக்கும். அந்த உறவு அவர்களுக்கு நல்ல உணர்வை கொடுக்கலாம். இந்த உணர்வுகள் பெண்களின் சுயமரியாதையை வளர்க்கும். இதற்காகவும் பெண்கள் கள்ள உறவில் ஈடுபட விரும்புகிறார்கள்.

நெருக்கத்தை விரும்புகிறார்கள்
உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ இருந்தாலும், பெண்கள் அனைவரும் சந்திக்க விரும்பும் தேவைகளில் ஒன்று நெருக்கம். ஒரு பெண் தனது உறவில் அந்தரங்கமான திருப்தியை உணரவில்லை என்றால், அந்த வகையான நெருக்கத்தை வெளிப்படுத்தும் வேறொரு நபருடன் ஈர்ப்பு உருவாகும். ஏமாற்றும் ஆண்களை விட பெண்கள் தாங்கள் ஏமாற்றும் புதிய நபருடன் வலுவான உணர்ச்சி ரீதியான தொடர்பைக் கொண்டிருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.



Click it and Unblock the Notifications