Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
ஆண்களே! உங்க மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் முக்கியமான காரணமாம்... ஷாக் ஆகாம படிங்க!
பல பெண்கள் தங்கள் துணையிடம் பாலியல் ரீதியாக ஈர்க்கப்படாமல் இருக்கும்போது ஏமாற்ற தொடங்குகிறார்கள். தம்பதிகள் இருவருக்கும் இடையேயான புரிதல் இல்லாததற்கு பாலியல் ஆசை மற்றும் தேவையை மக்கள் உண்மையில் அடையாளம் காணவில்லை.
இன்றைய நாளில் பெரும்பாலான தம்பதிகளிடையே உறவு மற்றும் பாலியல் விருப்பம் குறித்து பல விஷயங்கள் ஒத்துப்போவதில்லை. பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலையால் பல தம்பதிகள் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள். பெரும்பாலும் கள்ள உறவில் ஈடுபடுவது ஆண்களே என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், பெண்களை விட ஆண்களே அதிகம் ஏமாற்றுகிறார்கள் என்ற கட்டுக்கதை சமீப காலமாக பொய்யாகி வருகிறது. ஆம், ஆண்களைப் போலவே பெண்களும் உறவுகளில் ஏமாற்றுகிறார்கள். வேறொரு நபருடன் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள். இந்த சூழலில் ஏமாற்றுவதற்கான காரணங்கள் வரும் நாட்களில் மிகவும் ஒத்ததாகி வருகின்றன.

இருப்பினும், பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் துரோகத்தில் ஈடுபடுவதற்கான டாப் காரணங்கள் உள்ளன. எந்த வகையான சூழ்நிலையிலும் அவை பட்டியலில் முதலிடம் வகிக்கின்றன. அவை என்னென்ன காரணங்கள் என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

அன்பு இல்லாமை
பெண்கள் தங்கள் கணவனிடம் மிகக் குறைவாகவோ அல்லது அன்பு இல்லாமலோ இருக்கும்போது தங்கள் உறவுகளில் ஏமாற்ற தொடங்குகிறார்கள். அன்பு, கவனிப்பு மற்றும் புரிதல் இல்லாமை ஒரு பெண்ணை உறவிலிருந்து விலக வைக்கிறது. இதனால், அவர்கள் வேறொரு உறவில் அல்லது காதலில் ஈடுபட விரும்புகிறார்கள். இது நேர்மை, கவனம், கவனிப்பு இல்லாமை போன்ற காரணங்களால் ஏற்படும். இது பாலியல் மற்றும் உணர்ச்சி துரோகத்திற்கு கூட வழிவகுக்கும்.

பாலியல் ஆசை இல்லாமை
பல பெண்கள் தங்கள் துணையிடம் பாலியல் ரீதியாக ஈர்க்கப்படாமல் இருக்கும்போது ஏமாற்ற தொடங்குகிறார்கள். தம்பதிகள் இருவருக்கும் இடையேயான புரிதல் இல்லாததற்கு பாலியல் ஆசை மற்றும் தேவையை மக்கள் உண்மையில் அடையாளம் காணவில்லை. ஆனால் அது மிகவும் முக்கியமானது. பெண்கள் தங்கள் தற்போதைய உறவில் பெறாத பலவிதமான பாலியல் ஆசைகளை வேறொரு உறவில் பெற விரும்பலாம். எனவே, அவர்களது பாலியல் தேவைகளுக்காக உறவுக்கு வெளியே, வேறொரு உறவில் ஈடுபட விரும்புகிறார்கள்.

உறவுகளில் சிக்கிய உணர்வு
பெண்கள் தாங்கள் சிக்கியதாக உணரும் உறவுகளிலிருந்து வெளியேற வேறொரு உறவை தேட முனைகிறார்கள். அவர்கள் உண்மையில் இருப்பதை விட மதிப்பற்றவர்களாகவும் தகுதியற்றவர்களாகவும் உணரவைக்கும் கணவனுடன் இருக்க பெண்கள் விரும்பவில்லை. குறைந்த சுயமரியாதை போன்ற உணர்வு பெண்களை உறவுக்கு வெளியே அன்பையும் அக்கறையையும் தேட வைக்கும். அவர்கள் நேசிப்பதாக உணராதபோது, அவர்கள் யாரோ ஒருவருடன் உடலுறவு கொண்டாலும் அல்லது வெறுமனே ஒரு நபரின் இருப்பின் ஆறுதலாக இருந்தாலும், பதிலுக்கு அவர்களை நேசிக்கக்கூடியவர்களாக மாறுகிறார்கள்.

கோபம் அல்லது பழிவாங்கல்
பல பெண்கள் தங்கள் கணவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு உறவில் நுழைகிறார்கள். ஆனால், அந்த எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறாமல் அல்லது பொய்யாகும்போது, அவர்கள் சலிப்பையும் உறவின் மீது வெறுப்பையும் கொண்டுள்ளனர். தங்களின் ஒவ்வொரு தேவையையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும், வேறொரு உறவை நோக்கி அவர்கள் நகருகிறார்கள். சில பெண்கள் தங்கள் துணையின் கடந்த கால விவகாரம்( கள்ளத் தொடர்பு) போன்ற மற்றொரு காரணத்திற்காக தங்கள் துணையை வெறுப்படைய வைக்க, வேறொரு உறவை நோக்கி செல்லலாம். மேலும் தங்கள் சொந்த துரோகத்தை பதிலடியாக கொடுக்க, பெண்கள் கள்ள உறவில் ஈடுபட நினைக்கலாம்.

குறைந்த சுயமரியாதை
பெண்கள் தங்கள் உறவில் குறைந்த சுயமரியாதையை பெறும்போது, மன அழுத்தத்தைப் பெறுகிறார்கள். இந்த குறைந்த சுயமரியாதை அவர்களை துரோகம் செய்ய ஊக்குவிக்கும். தங்களை நன்றாக மதிக்கும் ஒரு புதிய நபருடன் உடலுறவு கொள்வது நேர்மறையான உணர்வுகளுக்கு வழிவகுக்கும். அந்த உறவு அவர்களுக்கு நல்ல உணர்வை கொடுக்கலாம். இந்த உணர்வுகள் பெண்களின் சுயமரியாதையை வளர்க்கும். இதற்காகவும் பெண்கள் கள்ள உறவில் ஈடுபட விரும்புகிறார்கள்.

நெருக்கத்தை விரும்புகிறார்கள்
உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ இருந்தாலும், பெண்கள் அனைவரும் சந்திக்க விரும்பும் தேவைகளில் ஒன்று நெருக்கம். ஒரு பெண் தனது உறவில் அந்தரங்கமான திருப்தியை உணரவில்லை என்றால், அந்த வகையான நெருக்கத்தை வெளிப்படுத்தும் வேறொரு நபருடன் ஈர்ப்பு உருவாகும். ஏமாற்றும் ஆண்களை விட பெண்கள் தாங்கள் ஏமாற்றும் புதிய நபருடன் வலுவான உணர்ச்சி ரீதியான தொடர்பைக் கொண்டிருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.



Click it and Unblock the Notifications











