Just In
- 1 min ago
ஆண்களே! உங்க வறண்ட முடியை பளபளன்னு மாத்த... நீங்க இத பண்ணா போதுமாம்...!
- 1 hr ago
வீக்கத்தைத் தடுக்க குளிர்காலத்தில் இந்த 5 உணவுகள நீங்க சாப்பிடவே கூடாதாம்... ஏன் தெரியுமா?
- 2 hrs ago
உங்க மாமியாரிடம் இந்த அறிகுறிகள் இருந்தா... நீங்க ரொம்ப கொடுத்தவச்ச மருமகளாம்...ஏன் தெரியுமா?
- 2 hrs ago
உங்க பாதத்தில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க கல்லீரல் பெரிய ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்... கவனமா இருங்க...!
Don't Miss
- Sports
ஆட்டநாயகன் விருது வென்றவரை எப்படியா நீக்குவீங்க? ஒன்னுமே எனக்கு புரியல.. கபில்தேவ் காட்டம்
- News
வடமாநில இளைஞர் மீது திடீரென பாய்ந்த துப்பாக்கி குண்டு! மிரண்ட சென்னைவாசிகள்.. என்ன நடந்தது
- Movies
வதந்திகளை நம்பாதீங்க.. விஜய் ஆண்டனி உடல் நிலை குறித்து இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை!
- Finance
முகேஷ் அம்பானி காட்டில் பண மழை.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Q3ல் ரூ.15,792 கோடி லாபம்..!
- Automobiles
டெலிவரி தொடங்கியாச்சு.. இனி ஃபார்ச்சூனருக்கு பதிலா இந்த காருலதான் எல்லா அரசியல்வாதிகளும் வலம் வர போறாங்க!
- Technology
பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
இந்த குணங்கள் மட்டும் உங்ககிட்ட இருந்தா உலகமே உங்களை புகழ்ந்து தள்ளுமாம்... உங்ககிட்ட இருக்கா?
பிறக்கும்போதே யாரும் மரியாதையுடன் பிறப்பதில்லை, அவர்கள் அதை தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் செயல்கள், மதிப்புகள் மற்றும் வார்த்தைகளின் மூலமாகதான் பெறுகிறார்கள். ஒரு நபரை அவர்களாக வடிவமைக்கும் சில விஷயங்கள் உள்ளன. அவமரியாதை மற்றும் தவறான செயல்கள் ஒரு நபரை உடனடியாக மற்றவர்களின் முன் வீழ்த்திவிடும். அவர்களை பற்றி தவறாக எண்ண நினைக்கும். அனைவரும் உங்களை பாராட்டக்கூடிய அல்லது போற்றத்தகுந்த நபராக பார்க்க சில விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டியுள்ளது.
நீங்கள் உங்களை எப்படி வெளியே காட்டுகிறார்கள் என்பதில் உண்மையிலேயே கவனமாக இருக்க வேண்டும். மக்கள் உங்களை பெரிதும் போற்ற வைக்கும் சில நுட்பமான விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல்
உங்கள் உணர்ச்சிகளை வழக்கத்தை விட அதிகமாக வெளிப்படுத்த நீங்கள் முனைந்தால், மக்கள் உங்களை மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும் பார்க்கக்கூடும். உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். இதனால் மக்கள் உங்களை ஒரு பலவீனமான நபராக பார்க்க மாட்டார்கள். சில உணர்வுகளை தங்களுக்குள் வைத்திருக்க முடியாது. அதேநேரம் நீங்கள் உங்களை எப்படி முன்வைக்கிறீர்கள் என்பதை நீங்கள் முழுமையாகக் கட்டுப்படுத்தினால், மக்கள் உங்களைப் பெரிதும் போற்றுவார்கள்.

தோற்றத்தை கவனித்துக்கொள்வது
நீங்கள் உங்களை கவனித்துக் கொள்வதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், ஒருவரின் தோற்றம், அவர்களை பற்றிய எண்ணங்களை மற்றவர்களிடம் பிரதிபலிக்கும். ஆதலால், நீங்கள் ஆடை அணிவதில் சிறப்பு கவனம் செலுத்தும்போதும், மக்கள் உங்களை வேறுவிதமாகப் பார்க்கிறார்கள். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் அழகாக நேர்த்தியாக ஆடை அணிந்திருந்தால், மக்கள் உங்களை மரியாதையுடன் பார்ப்பார்கள்.

இலக்குகளில் ஆர்வம்
உங்கள் இலக்குகள் மற்றும் லட்சியங்களில் நீங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கும்போது, அது மற்றவர்களையும் அவர்களின் கனவுகளைப் பின்பற்றத் தூண்டுகிறது. இது ஒரு நபரின் மிகவும் போற்றத்தக்க குணங்களில் ஒன்றாகும். இந்த குணம் உள்ளவர்களை சுற்றி மற்றவர்கள் இருக்க விரும்புகிறார்கள்.

அனைத்தையும் முதலில் வெளிப்படுத்துவதில்லை
ஆரம்பத்தில் தங்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் வெளிப்படுத்தும் நபர்களுடன் பேசுவதில் மக்கள் ஆர்வத்தை இழக்கின்றனர். ஒரு நபரின் கவனத்தை உங்களை நோக்கியே வைத்திருக்க ஒரு சிறிய மர்மத்தை வைத்திருப்பது சிறந்த வழியாகும். ஏனெனில் அது மக்களை யூகிக்க வைக்கும். உங்களை பற்றி நினைக்க வைக்கும்.

பாராட்டுக்களை வழங்குதல்
நீங்கள் அடிக்கடி மக்களை பாராட்டும்போது, அவர்களின் மதிப்பு திடீரென்று குறைகிறது. இது அவர்களுக்கு பெரிதாக தெரியாது. ஆனால், நீங்கள் எப்போதாவது ஒருவருக்கு உண்மையான பாராட்டுக்களைத் தெரிவிக்கும்போது, அது அதிக மதிப்பைப் பெறுகிறது. மக்கள் உங்களை உண்மையிலேயே நீங்கள் போற்றத்தக்கவர் என்று பாராட்டுகிறார்கள்.

மனதில் உள்ளதை பேசுவது
பின்விளைவுகள் எதுவாக இருந்தாலும், அனைவரின் முன்னிலையிலும் தன் கருத்தைப் பேசும் தைரியம் கொண்டவர், அனைவராலும் மதிக்கப்படுகிறார், போற்றப்படுகிறார். அவ்வாறு செய்வதற்கான தைரியம் மட்டுமே மக்கள் உண்மையிலேயே பாராட்டக்கூடிய ஒரு பாராட்டத்தக்க குணம்.