Latest Updates
-
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ரவா தேங்காய் தோசையும், தக்காளி சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூலையில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
கனவில் பணத்தை பார்ப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? -
July Born Personality: ஜூலை மாதம் பிறந்தவங்களோட குணாதிசயம் உண்மையில் எப்படி இருக்கும் தெரியுமா?
படுக்கையறையில் நாயா? கணவனா? வருங்கால கணவனை விரட்டியடித்த பெங்களூர் பெண்!
திருமணமும், காதலும் பல்வேறு காரணத்தால் பிரிந்து பார்த்திருப்போம். நூற்றாண்டு இந்திய சினிமாவில் பல வகையில், பல கலவைகளில் காதல் கதைகள், அதில் சண்டைகள் நாம் பார்த்திருப்போம். ஆனால், இது அதுக்கும் மேல, ஒரு நாய் காரணமாக திருமண பந்தம் துவங்குவதற்கு முன்பே பிரிந்துவிட்டது.
இருவீட்டார் சம்மதத்துடன், திருமணம் பந்தத்தில் இணைய இருந்த இருவர் மத்தியில் நாய் ஒன்று குறுக்கே வந்து கபடி விளையாடிவிட்டு போயிருக்கிறது. ஒருப்பக்கம் செல்ல பிராணி மீது வைத்திருக்கும் அலாதி பிரியம் பாராட்டலாம் என்றாலும், அந்த பெண் கூறிய காரணம் இந்தளவு வேண்டுமா என கேள்வி எழுப்ப வைக்கிறது.
இதோ, அந்த வாட்ஸ்-அப் கலந்துரையாடல்...

தீர்வு தான் என்ன?
தான் ஒரு தீர்வை எதிர்பார்பதாக எந்த மணமகன் கேட்க, அந்த பெண், நாம் ஏற்கனவே இதைப்பற்றி பேசிவிட்டோம் என கூறியுள்ளார்.

நாயுடன் படுக்கையா?
நாயுடன் தனது படுக்கையை பகிர்ந்துக் கொள்ள முடியாது. என் அன்னைக்கும் நாய்கள் பிடிக்காது என மணமகன் கூற, மணமகள், அதனால் தான் நான் கூறுகிறேன், இது ஒத்துவராது என பதிலளித்துள்ளார்.

முடிவாக தான் கூறுகிறாயா?
கடவுளே, முடிவாக நீ கூறவருவது இதுதானா என மணமகன் கேட்க, ஆம், இது தான். இதனால் பின்னால் பிரச்சனைகள் வரலாம் என மணமகள் கூறியுள்ளார்.

நாய் தற்காலிகம்!
தற்காலிகமான நாய்க்காக நீ இந்த முடிவை எடுக்கிறாயா? நாங்கள் உனது வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என மணமகன் கூறியதற்கு, நாய் தற்காலிகமானது அல்ல. நான் எனது நாயை விட்டு பிரிய மாட்டேன் என மணமகள் கூறியுள்ளார்.

நாயையே கட்டிக்கொள்!
உனக்கு நாய் தான் முக்கியம் என்றால் அந்த நாயையே திருமணம் செய்துக் கொள் என மணமகன் கூறி சென்றுவிட்டார்.
மனைவிக்கு பேய் பிடித்து பிரிந்த குடும்பங்கள் கூட நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், நாய் பிடித்து பிரிந்து போனது இதுதான் முதல்முறை!



Click it and Unblock the Notifications