Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
கணவருக்கு மூன்றாவது திருமணம் செய்து வைக்க கஷ்டப்பட்ட முதல் இரண்டு மனைவிகள்... காரணம் என்ன தெரியுமா?
திருமண உறவு என்பது இந்தியாவில் மிகவும் புனிதமான உறவாக கருதப்படுகிறது, அதிலும் நமது கலாச்சாரத்தில் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கோட்பாடு வலிமையாக உள்ளது. இந்த கோட்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாக முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் சட்ட விரோதம் என்ற சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டம் திருமண உறவை பாதுக்கப்பதாக இருந்தாலும் இந்த சட்டத்தை மீறி ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்பவர்கள் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர். அவ்வப்போது இரண்டாவது திருமணம் நடைபெறுவது சாதாரணமானதாக இருந்தாலும் சிலர் அதையும் மீறி அபத்தமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஆந்திர பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜு (ஏஎஸ்ஆர்) மாவட்டத்தின் பழங்குடியின குக்கிராமத்தில் வசிப்பவர்கள் சமீபத்தில் ஒரு விசித்திரமான திருமணத்தை கண்டனர். அங்கு மணமகன் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் மற்றும் அவரது முதல் இரண்டு மனைவிகள் அந்த திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதி ஆந்திராவின் தொலைதூர பகுதியில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
செய்திகளின்படி, மணமகன், பெடபயலு மண்டலத்திற்கு உட்பட்ட கிஞ்சூரு கிராமத்தைச் சேர்ந்த எஸ் பாண்டன்னா, 2000 ஆம் ஆண்டில் முதல் மனைவி சாகேனி பர்வதம்மாவை மணந்தார், ஆனால் அந்த தம்பதியருக்கு குழந்தை பிறக்கவில்லை.
குழந்தை பிறக்காததால் அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைக்காமல், 2005-ம் ஆண்டு சாகேனி அப்பலம்மா என்ற மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார் பாண்டண்ணா. இந்த முறை அவரின் முயற்சி பயனளித்தது, 2007-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அதன்பின் பாண்டன்னா தனது இரண்டு மனைவிகள் மற்றும் ஒரு மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். பின்னர், இரண்டாவது மனைவிக்கு வேறு குழந்தை இல்லாததால், மேலும் குழந்தைகளைப் பெற மூன்றாவது திருமணம் செய்ய முடிவு செய்தார். இதுகுறித்து பாண்டண்ணா தனது மனைவிகளிடம் கூற, அவர்களே ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்தனர். இந்நிலையில் பாண்டான்னாக்கு லவ்யா என்ற பெண்ணுடன் மூன்றாவது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்கான அழைப்பிதழ்களை தங்கள் பெயரில் அனுப்புவது மட்டுமின்றி, முதல் இரண்டு மனைவிகளும் தங்கள் கணவரின் மூன்றாவது திருமணத்தை அறிவிக்க கிராமத்தில் போஸ்டர்களை ஒட்டினர்.
ஜூன் 25 அன்று, ஆரவாரம் மற்றும் கூச்சல்களுக்கு மத்தியில் பாண்டன்னா மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொண்டார். பாண்டன்னா தனது மூன்று மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்வார் என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். சில பழங்குடியின பகுதிகளில் ஆண்களுக்கு இரண்டு மனைவிகள் இருப்பது வழக்கம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இருப்பினும், ஒரு மனிதன் மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொள்வது பழங்குடியினருக்கே அரிது.
இதுபோன்ற சம்பவங்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் இவை சமூகத்தில் பெண்கள் மீதான அடக்குமுறையையும், அவர்கள் மீதான சுரண்டலையும் வெளிப்படுத்துகிறது. மேலும் பழங்குடியின மக்களிடையே இருக்கும் அறியாமையையும், சட்டத்தை அவர்கள் எப்படி மதிக்கிறார்கள் என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.



Click it and Unblock the Notifications
