Just In
- 23 min ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 3 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 8 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 9 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
Don't Miss
- News வெயில் வாட்டி வதைக்குது.. உடனே இதை பண்ணுங்க.. உதயநிதி ஸ்டாலினின் "கூல்" அட்வைஸ்!
- Movies Aparna Das - நிலைபெயராது சிலை போலவே நின்று.. ரிசப்ஷனில் தங்க நிற சேலையில் ஜொலித்த டாடா பட நடிகை!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!!
பொதுவாக ஒருதலைக் காதலானது ஒருவர் மற்றொருவரை இம்ப்ரஸ் பண்ணாமல் வராது. அப்படி காதல் வந்து ஒப்புக் கொள்ளவில்லை என்றால் கவலை வேண்டாம். காதல் தோல்வி ஆகிவிட்டது என்று சிலர் தற்கொலை செய்கிறார்கள். அப்படி செய்பவர்கள் மடையர்கள், முட்டாள்கள். சிறப்பாய் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் காதல் என்கின்றனர் நிபுணர்கள்.
வாழ்க்கை என்பது ஒரு முறை தான் வரும். அந்த வாழ்க்கையை ஒரு வரம் என்றும் சொல்லலாம். அப்படி கிடைக்கும் அற்புத வாழ்க்கை சாதாரண விஷயமல்ல. நாம் தான் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே!
மீண்டும் பழைய பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு யாராவது இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். அப்படி புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல் போய்விடும்.
சொல்லப்போனால் காதலில் வெற்றியடைந்தவர்கள் அடுத்ததாக திருமணம், குழந்தை, படிப்பு என எதிர்காலத்தை யோசித்து காதலை பெரும்பாலும் தொலைத்துவிடுவார்கள். ஆனால் காதலில் தோற்றவர்கள் அந்தக் காதலை வாழ்நாள் முழுவதும் மறக்காமல், மனதிற்குள் ஒரு தாஜ்மகாலைக் கட்டி தோற்றுப்போன காதலை நினைத்து பூஜித்து வருவார்கள்.
ஒரு வகையில் காதலில் தோல்வி என்பதும் ஒரு சுகமான அனுபவமே! காதல் தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் எப்போது காதலிக்கத் தொடங்கலாம் என்று சிலர் கேட்கலாம். உலகில் காதல் இல்லாத எவரும் இல்லை, அந்த காதல் சுவாசம் மாதிரி ஒரு நொடியும் நம்மை விட்டு போகாது. அடுத்த காதல் எப்போது வேண்டுமானாலும் வரும். எனவே கவலைப்படாமல் தயாரா இருங்க!