Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
டைவர்ஸ் ஆனாலும் நண்பர்களாக இருக்கலாம்!

சண்டை வேண்டாம்
ஒருவருக்கொருவர் புரிதல்கள் இல்லாமல் போனால் இல்லறத்தில் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்புதான். குடும்பத்தில் சண்டை என்பது ஏற்படக்கூடியதுதான். கூடுமானாவரை சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும். ஈகோ ஏற்பட்டால்தான் பிரச்சினை முற்றும். ஒரு சில வீடுகளில் விலங்குகளைப் போல எடுத்ததற்கெல்லாம் சண்டை போடுவதாலேயே விவாகரத்து வரை முற்றுகிறது.
ஏமாற்றத்தால் முறிவு
திருமணவாழ்க்கையில் ஏமாற்றங்கள் ஏற்படும்போது வலியும், அதனால் பிரிவும் ஏற்படுகிறது. எனவே விவாகரத்து வழக்கில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக தேவையற்ற பிரச்சினைகளை எழுப்ப வேண்டாம். வாழ்க்கைத்துணையை குறை கூறுவதன் மூலம் வலியும், வேதனையுமே மிஞ்சும்.
தெளிவான காரணம்
விவாகரத்திற்கான காரணம் தெளிவாக இருக்கவேண்டும். எந்த காரணத்திற்காக விவாகரத்து கேட்கிறோம் என்பதை தெளிவாக கூறினால் மட்டுமே விவாகாரத்து கிடைக்கும். இல்லத்தில் துன்புறுத்தல், செயல்பட இயலாமே போன்றவைகளுக்கு எளிதாக விவாகாரத்து கிடைக்கும்.
பரஸ்பர விவாகரத்து
ஒருவரை ஒருவர் விட்டு விலகுவது என்று முடிவெடுத்தபின்னர் பரஸ்பர விவாகாரத்திற்கு அப்ளை செய்யலாம். அதுதான் எளிதானது சிக்கலற்றது. அதை விடுத்து தேவையற்ற ட்ரிக்குகளை செய்யவேண்டாம். அது வேதனைகளை ஏற்படுத்திவிடும்.
மணவாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு இணைந்து வாழவே முடியாது என்ற தருணத்தில்தான் விவாகரத்து குறித்த பேச்சுக்கள் எழும். எத்தனையோ தம்பதியர் பிரிந்த பின்னரும் குழந்தைகளுக்காக ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து நண்பர்களாக வாழ்கின்றனர். அதேபோல் பிரச்சினையில்லாமல் விவாகரத்து பெற்றுக்கொள்வதே ஏற்றது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications











