டைவர்ஸ் ஆனாலும் நண்பர்களாக இருக்கலாம்!

By Mayura Akilan

Divorce
மணவாழ்க்கையில் பிரிவு என்பது ஏற்படக்கூடாதுதான். தவிர்க்க முடியாத சில காரணங்கள். இணைந்து வாழவே முடியாது என்ற சூழ்நிலையில்தான் தம்பதியர் பிரிய நேரிடுகிறது. நேற்றுவரை ஒரே வீட்டில் தம்பதியராக இருந்து விட்டு இன்று பிரியும் போது ஒருவரை ஒருவர் குறைகூறி ஏன் பிரியவேண்டும்? என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். சண்டையில்லாமல், மனதில் வலியில்லாமல் பிரிந்துவிடலாம் என்கின்றனர் உளவியலாளர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை கேளுங்களேன்.

சண்டை வேண்டாம்

ஒருவருக்கொருவர் புரிதல்கள் இல்லாமல் போனால் இல்லறத்தில் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்புதான். குடும்பத்தில் சண்டை என்பது ஏற்படக்கூடியதுதான். கூடுமானாவரை சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும். ஈகோ ஏற்பட்டால்தான் பிரச்சினை முற்றும். ஒரு சில வீடுகளில் விலங்குகளைப் போல எடுத்ததற்கெல்லாம் சண்டை போடுவதாலேயே விவாகரத்து வரை முற்றுகிறது.

ஏமாற்றத்தால் முறிவு

திருமணவாழ்க்கையில் ஏமாற்றங்கள் ஏற்படும்போது வலியும், அதனால் பிரிவும் ஏற்படுகிறது. எனவே விவாகரத்து வழக்கில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக தேவையற்ற பிரச்சினைகளை எழுப்ப வேண்டாம். வாழ்க்கைத்துணையை குறை கூறுவதன் மூலம் வலியும், வேதனையுமே மிஞ்சும்.

தெளிவான காரணம்

விவாகரத்திற்கான காரணம் தெளிவாக இருக்கவேண்டும். எந்த காரணத்திற்காக விவாகரத்து கேட்கிறோம் என்பதை தெளிவாக கூறினால் மட்டுமே விவாகாரத்து கிடைக்கும். இல்லத்தில் துன்புறுத்தல், செயல்பட இயலாமே போன்றவைகளுக்கு எளிதாக விவாகாரத்து கிடைக்கும்.

பரஸ்பர விவாகரத்து

ஒருவரை ஒருவர் விட்டு விலகுவது என்று முடிவெடுத்தபின்னர் பரஸ்பர விவாகாரத்திற்கு அப்ளை செய்யலாம். அதுதான் எளிதானது சிக்கலற்றது. அதை விடுத்து தேவையற்ற ட்ரிக்குகளை செய்யவேண்டாம். அது வேதனைகளை ஏற்படுத்திவிடும்.

மணவாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு இணைந்து வாழவே முடியாது என்ற தருணத்தில்தான் விவாகரத்து குறித்த பேச்சுக்கள் எழும். எத்தனையோ தம்பதியர் பிரிந்த பின்னரும் குழந்தைகளுக்காக ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து நண்பர்களாக வாழ்கின்றனர். அதேபோல் பிரச்சினையில்லாமல் விவாகரத்து பெற்றுக்கொள்வதே ஏற்றது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

Story first published: Thursday, April 26, 2012, 12:29 [IST]
Desktop Bottom Promotion