பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்

Posted By:

Yellow Pumpkin Pulao Recipe in Tamil: மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதே சமயம் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையான ஒரு உணவை சமைக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பாசுமதி அரிசியும், பரங்கிக்காய் என்று அழைக்கப்படும் மஞ்சள் பூசணிக்காயும் உள்ளதா? அப்படியானால் அதை வைத்து வீடே மணக்கும் படி சூப்பரான புலாவை செய்து பாருங்கள்.

Yellow Pumpkin Pulao Recipe How to Make at Home in Tamil

பொதுவாக பரங்கிக்காயை வைத்து பொரியல்தான் செய்வார்கள். ஆனால் பரங்கிக்காயை வைத்து இந்த மாதிரி சுவையான புலாவை நீங்கள் இதுவரை செய்திருக்க மாட்டீர்கள். இந்த பரங்கிக்காய் புலாவ் ஒரு ஒன்பாட் ரெசிபி என்பதால், குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிற்கும் செய்து கொடுக்கலாம். இந்த ஒரு சிம்பிளான புலாவ் சிக்கன் பிரியாணியே தோற்கும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்கள் குழந்தைகள் காய்கறி சாப்பிடாதவர்கள் என்றால் இந்த ஸ்டைலில் செய்யும் போது அவர்கள் கூட காய்கறிகளை சாப்பிடுவார்கள். அதோடு இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும் என்பதால் பேச்சுலர்களும் இதை தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம்.

உங்களுக்கு சுவையான பரங்கிக்காய் புலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பரங்கிக்காய் புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 1/2 கப் பாசுமதி அரிசி
- 1 கப் தண்ணீர்
- 1/4 கப் நறுக்கிய பரங்கிக்காய்
- 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
- 3 பச்சை மிளகாய் (நீளமாக கீறியது)
- தேவையான அளவு உப்பு
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 ஸ்பூன் சர்க்கரை
- 1 பிரியாணி இலை
- 1 அன்னாசிப்பூ
- 2 கிராம்பு
- 1 அங்குல துண்டு பட்டை
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் எண்ணெய்

செய்முறை:

- முதலில் பாசுமதி அரிசியை நன்றாகக் கழுவி, 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். அதே நேரத்தில், மஞ்சள் பூசணிக்காயை நறுக்கி, கழுவி தனியாக எடுத்து வைக்கவும்.

- ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெயைச் சூடாக்கி, எண்ணெய் சூடானதும் அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும்.

- சீரகம் பொரிந்ததும், இரண்டாக கீறிய பச்சை மிளகாய், நறுக்கி மஞ்சள் பூசணிக்காய் மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து அவற்றை ஒரு நிமிடம் வதக்கவும்.

- ஊறவைத்த அரிசியில் உள்ள நீரை வடித்துவிட்டு, அதை மஞ்சள் தூள், உப்பு மற்றும் சர்க்கரையுடன் சேர்த்து பிரஷர் குக்கரில் போடவும். அனைத்தும் ஒன்று சேரும் வரை குறைந்த தீயில் ஒரு நிமிடம் வதக்கவும்.

- தண்ணீரைச் சேர்த்து, அது நன்கு கொதிக்கத் தொடங்கியதும் பிரஷர் குக்கரை மூடி, மிதமான தீயில் 2 விசில் வரும் வரை பூசணிக்காய் புலாவை சமைக்கவும். இரண்டு விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடவும்.

- அழுத்தம் தானாக வெளியேறும் வரை காத்திருக்கவும். பிரஷர் வெளியேறியதும் குக்கரைத் திறக்கவும். பூசணி புலாவை கரண்டியை திருப்பி நன்கு கிளறி, ஒரு பரிமாறும் தட்டிற்கு மாற்றி ரைத்தாவுடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, August 19, 2026, 13:14 [IST]
Desktop Bottom Promotion