Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
வெத்தலையை இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்...!
Vethalai Chutney Recipe in Tamil: மழைக்காலத்தில் பொதுவாகவே அனைவருக்கும் எளிதில் சளி, காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட துவங்கும். அதைக் கருத்தில் கொண்டு நாம் சமைக்கும் உணவுப் பொருட்களில் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் வகையிலும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையிலும் சில பொருட்களை சேர்க்க வேண்டியது அவசியம். இந்த இந்த பொருட்களை பெரும்பாலும் நாம் சூப் அல்லது கஷாயமாக செய்து கொடுப்போம். அப்படி கொடுக்கும் போது குழந்தைகள் அதை நிச்சயம் விரும்பமாட்டார்கள்.
சளியை விரட்டும் உணவுகளை அவர்களுக்கே தெரியாமல் உணவில் கலந்து கொடுக்க மிகவும் சரியான வழி சட்னி தான். நாம் பொதுவாக பயன்படுத்தும் வெற்றிலை கூட சளியை விரட்டும் சிறந்த பொருளாகும். எனவே வெற்றிலையை சட்னியாக அரைத்துக் கொடுக்கும் போது குழந்தைகள் அதனை இட்லி அல்லது தோசையுடன் சேர்த்து அவர்களுக்கே தெரியாமல் சாப்பிட்டு விடுவார்கள். இது அவர்களை சளியாக ஏற்படும் பாதிப்புகள் இருந்து பாதுகாக்கும்.

உங்களுக்கு ஆரோக்கியமான வெற்றிலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெற்றிலை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- வெற்றிலை - 10
- தக்காளி - 3
- புளி - நெல்லிக்காய் அளவு
- மிளகு - 15
- வெந்தயம் - 1/4 ஸ்பூன்
- கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
- தனியா - 2 ஸ்பூன்
- உளுந்து - 2 ஸ்பூன்
- வர மிளகாய் - 8
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- எள் - ஒரு ஸ்பூன்
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் வெந்தயம், கடலைப்பருப்பு, தனியா, உளுந்து, வர மிளகாய், பெருங்காயம் இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- உளுந்து லேசாக நிறம் மாறியதும் அதில் எள், மிளகு இவற்றை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
- அனைத்தும் நன்றாக வறுபட்ட பிறகு அதை தனியாக எடுத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஆற வைக்க வேண்டும்.
- அதே கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் புளி இரண்டையும் நன்றாக வதக்க வேண்டும்.
- தக்காளி நன்கு வெந்து கூழ் பதத்திற்கு வரும் அளவிற்கு வதக்க வேண்டும். அதே நேரத்தில் வெற்றிலையை எடுத்து அதன் நடுவில் இருக்கக்கூடிய நரம்பை நீக்கி சிறிது சிறிதாக கிள்ளி வைத்துக் கொள்ள வேண்டும்.
- தக்காளி நன்றாக வெந்து கரைந்த பிறகு எடுத்து வைத்திருக்கும் வெற்றிலையை அதில் சேர்த்து நன்றாக சுருளும் வரை கிளற வேண்டும்.
- வெற்றிலை நன்றாக வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது மிக்ஸி ஜாரை எடுத்து நாம் ஏற்கனவே வறுத்து ஆற வைத்திருந்த பொருட்களை அதில் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு தக்காளி வெற்றிலையை அரைத்து வைத்த அந்த பொடியுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு சட்னி பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- தேவைப்பட்டால் இந்த சட்னியுடன் கருவேப்பிலையை சேர்த்துக் கொள்ளலாம். இந்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி வைத்து விட்டு ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்து, கருவேப்பிலை, வர மிளகாய் இவற்றை போட்டு சட்னி மீது கொட்டி நன்கு கிளற வேண்டும்.
- அவ்வளவுதான் அருமையான மற்றும் ஆரோக்கியமான வெற்றிலை சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications











