Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
காய்கறியே இல்லாத இந்த காரக்குழம்பு செஞ்சு பாருங்க... மதிய உணவுக்கு சூப்பரா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
Vendhaya Kulambu Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் மதிய உணவுக்கு சமைக்கப்படுவது சாம்பார் அல்லது புளிக்குழம்புதான், ஆனால் இந்த இரண்டையே எத்தனை நாட்கள்தான் செய்து கொண்டிருப்பது. இதுபோன்ற நேரத்தில் பொதுவாக குருமா அல்லது காரக்குழம்பு பக்கம் நம்முடைய கவனம் செல்லும்.
பொதுவாக காரக்குழம்பு என்றால் அதில் ஏதாவது காய்கறி சேர்த்துதான் செய்வோம். காய்கறிகள் இல்லாத நேரத்தில் வீட்டிலிருக்கும் வெந்தயத்தை வைத்தே சாதத்துக்கு அருமையான வெந்தய காரக்குழம்பு செய்யலாம். இந்த குழம்பு செய்வதற்கு எளிதானது அதேசமயம் சுவையானதும் கூட, கூடுதலாக இதில் சில ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது. இந்த பதிவில் சூப்பரான வெந்தயக் குழம்பை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- வெந்தயம் - 4 ஸ்பூன்
- வரமிளகாய் - 4
- மல்லி - 3 ஸ்பூன்
- சீரகம் - ஒரு ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 10
- பூண்டு - 8 பல்
- புளி - ஒரு எலுமிச்சை அளவு
- தேங்காய் துருவல் - அரை கப்
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- மேலே குறிப்பிட்டுள்ள அளவில் அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டை உரித்து வைக்கவும்.
- வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
- வரமிளகாய், மல்லி, சீரகம் இவை மூன்றையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- வறுத்த பொருட்களை பொடியாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். ஊற வைத்த வெந்தயத்தை வடிகட்டி வாணலியில் போட்டு வதக்கவும்.
- வதங்கியதும் நறுக்கின வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்..
- அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மிளகாய் விழுதினை போட்டு வதக்கவும்.
- பச்சை வாசனை போனதும் அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்க்கவும்.
- குழம்பு கொதித்ததும் புளியை கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- பின்னர் அடுப்பை குறைத்து வைத்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி வைக்கவும்.



Click it and Unblock the Notifications











