பிபி, சுகர் காணாமல் போகணுமா? இந்த சப்பாத்தியை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க... இதுக்கு சைடு டிஷ்ஷே வேணாம்..

Posted By:

Vendhaya Keerai Masala Chapati Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இரவு நேரத்தில் சப்பாத்தி செய்வீர்களா? அதுவும் எப்போதும் வெறும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அப்படியானால் வீட்டில் வெந்தயக்கீரை இருந்தால், அதைக் கொண்டு வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தியை செய்து சாப்பிடுங்கள். இந்த சப்பாத்தி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, சத்தானதும் கூட.

அதுவும் உங்கள் வீட்டில் இரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் இருந்தால், அவர்களுக்கு இந்த சப்பாத்தியை அடிக்கடி செய்து கொடுத்தால், பிபி, சுகர் எல்லாம் காணாமல் போகும். முக்கியமாக இந்த சப்பாத்திக்கு சைடு டிஷ் எதுவுமே தேவைப்படாது. வெறுமனே அல்லது ரெய்தா இருந்தாலே போதும். அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த சப்பாத்தி. குறிப்பாக மிகவும் மென்மையாக இருக்கும்.

Vendhaya Keerai Masala Chapati How To Make a Fenugreek Masala Chapati

உங்களுக்கு வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு - 2 கப்
* கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* வெந்தயக்கீரை - 1 கைப்பிடி
* நெய் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் சுவைக்கேற்ப உப்பு, 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் சீரகத் தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மல்லித் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 கைப்பிடி வெந்தயக்கீரையை சேர்த்து, கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து பிசைய வேண்டும்.
* பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் பிசைந்த மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி, மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, பிசைந்த மாவை மீண்டும் நன்கு அழுத்தி பிசைய வேண்டும்.
* அதன் பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒவ்வொரு உருண்டையாக எடுத்து, சப்பாத்தி போன்று மெல்லியதாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல்லை சூடேற்ற வேண்டும்.
* கல் சூடானதும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, April 28, 2025, 21:05 [IST]
Desktop Bottom Promotion