Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
வறுத்து அரைச்ச சாம்பார்: ஓணம் ரெசிபி
ஓணம் பண்டிகையன்று கேரளாவில் பல்வேறு ரெசிபிக்கள் சமைக்கப்படும். அதிலும் கேரளாவின் பாரம்பரிய ரெசிபிக்களானது சமைக்கப்படும். அப்படி ஓணம் பண்டிகையன்று சமைக்கப்படும் ஒரு ரெசிபி தான் வறுத்து அரைச்ச சாம்பார். இந்த சாம்பாரின் ஸ்பெஷலானது முதலில் மசாலாப் பொருட்களானது வறுத்து அரைக்கப்பட்டு, பின் சமைக்கப்படும்.
இங்கு கேரளா பாரம்பரிய ரெசிபியான வறுத்து அரைச்ச சாம்பார் ரெசிபியின் செய்முறையானது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை செய்து சுவைத்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப் (நீரில் ஊற வைத்து கழுவியது)
முருங்கைக்காய் - 2 (நறுக்கியது)
கேரட் - 2 (நறுக்கியது)
பீன்ஸ் - 10 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 8
துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
மல்லி - 2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, ஒரு பெரிய பௌல் அளவில் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேங்காய், வெந்தயம், மல்லி, வரமிளகாய் மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து 5 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் புளிச்சாற்றினை ஊற்றி, அதில் துவரம் பருப்பை நீரில் கழுவி சேர்த்து, அத்துடன் காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து, 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, 6-7 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இறுதியில் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் அதில் கொதித்து கொண்டிருக்கும் சாம்பாரை ஊற்றினால், வறுத்து அரைச்ச சாம்பார் ரெடி!!!



Click it and Unblock the Notifications