Latest Updates
-
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம்
தஞ்சாவூர் கதம்ப சாதம்
தஞ்சாவூர் என்றால் நினைவிற்கு வருவது தஞ்சை பெரிய கோவில் தான். ஆனால் தஞ்சாவூரில் ரெசிபி ஒன்றும் மிகவும் பிரபலமானது. அது தான் தஞ்சாவூர் கதம்ப சாதம். இந்த கதம்ப சாதமானது ஐயர் வீடுகளில் அதிகம் செய்யப்படும். இந்த கதம்ப சாதத்தை உங்கள் வீடுகளில் செய்ய ஆசைப்பட்டால் தொடர்ந்து படியுங்கள்.
ஏனெனில் இங்கு தஞ்சாவூர் கதம்ப சாதத்தின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப் (நீரில் கழுவி வைத்தது)
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
தேங்காய் பால் - 1 மற்றும் 1/2 கப் (வெதுவெதுப்பான நீர் சேர்த்தது)
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
முந்திரி - 100 கிராம்
காய்கறிகள் - 1 கப் (பீன்ஸ், மொச்சை, கத்திரிக்காய், கேரட், சௌசௌ, முருங்கைக்காய்)
பச்சை மிளகாய் - 1
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு...
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 4
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு, வரமிளகாய் மற்றும் மல்லி ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அத்துடன் கிராம்பு, ஏலக்காய் சேர்தது தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் காய்கறிகள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும்.
பிறகு அதில் அரிசியை சேர்த்து, வெதுவெதுப்பான நீர் சேர்த்த தேங்காய் பாலை ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட வேண்டும்.
பின் குக்கரை திறந்து, அதில் கெட்டியான தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி 15 நிமிடம் கழித்து திறந்து, சிறிது நெய் சேர்த்து கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவி பரிமாறினால், தஞ்சாவூர் கதம்ப சாதம் ரெடி!!!
Image Courtesy: simpleindianrecipes



Click it and Unblock the Notifications