Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
பேச்சுலர்களுக்கான... பன்னீர் மசாலா
பன்னீர் நிறைய பேருக்கு மிகவும் பிடித்த உணவுப் பொருளாக இருக்கும். அப்படி உங்களுக்கு பன்னீர் ரொம்ப பிடிக்கும், ஆனால் அதை எப்படி சமைப்பது என்று தெரியாமல் இருந்தால், தமிழ் போல்ட் ஸ்கை ஒரு ஈஸியான மற்றும் காரமான பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது.
குறிப்பாக இந்த ரெசிபி பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். மேலும் இது சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றிற்கு மிகவும் சூப்பராக இருக்கும் சரி, அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!
,இதுப்போன்று வேறு: பேச்சுலர்களுக்கான சிக்கன் மசாலா ரெசிபி

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 600 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
தக்காளி - 3 (அரைத்தது)
சில்லி சாஸ் - 200 மி.லி
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
வெண்ணெய் - 60 கிராம்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் மீண்டும் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கி, மல்லி தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி, வேண்டுமானால், சிறிது எண்ணெயும் சேர்த்து கிளறி விட வேண்டும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் சில்லி சாஸ் ஊற்றி, கலவையை கொதிக்க விட வேண்டும்.
கலவையானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் வெண்ணெய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி, வெண்ணெயை உருக வைக்க வேண்டும்.
வெண்ணெயானது உருகியதும், அதில் பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், காரமான பன்னீர் மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications











