Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
பேச்சுலர்களுக்கான... பன்னீர் மசாலா
பன்னீர் நிறைய பேருக்கு மிகவும் பிடித்த உணவுப் பொருளாக இருக்கும். அப்படி உங்களுக்கு பன்னீர் ரொம்ப பிடிக்கும், ஆனால் அதை எப்படி சமைப்பது என்று தெரியாமல் இருந்தால், தமிழ் போல்ட் ஸ்கை ஒரு ஈஸியான மற்றும் காரமான பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது.
குறிப்பாக இந்த ரெசிபி பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். மேலும் இது சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றிற்கு மிகவும் சூப்பராக இருக்கும் சரி, அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!
,இதுப்போன்று வேறு: பேச்சுலர்களுக்கான சிக்கன் மசாலா ரெசிபி

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 600 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
தக்காளி - 3 (அரைத்தது)
சில்லி சாஸ் - 200 மி.லி
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
வெண்ணெய் - 60 கிராம்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் மீண்டும் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கி, மல்லி தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி, வேண்டுமானால், சிறிது எண்ணெயும் சேர்த்து கிளறி விட வேண்டும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் சில்லி சாஸ் ஊற்றி, கலவையை கொதிக்க விட வேண்டும்.
கலவையானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் வெண்ணெய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி, வெண்ணெயை உருக வைக்க வேண்டும்.
வெண்ணெயானது உருகியதும், அதில் பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், காரமான பன்னீர் மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications