Latest Updates
-
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர்! விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி - என்ன நடந்தது?
பேச்சுலர்களுக்கான... பன்னீர் மசாலா
பன்னீர் நிறைய பேருக்கு மிகவும் பிடித்த உணவுப் பொருளாக இருக்கும். அப்படி உங்களுக்கு பன்னீர் ரொம்ப பிடிக்கும், ஆனால் அதை எப்படி சமைப்பது என்று தெரியாமல் இருந்தால், தமிழ் போல்ட் ஸ்கை ஒரு ஈஸியான மற்றும் காரமான பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது.
குறிப்பாக இந்த ரெசிபி பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். மேலும் இது சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றிற்கு மிகவும் சூப்பராக இருக்கும் சரி, அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!
,இதுப்போன்று வேறு: பேச்சுலர்களுக்கான சிக்கன் மசாலா ரெசிபி

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 600 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
தக்காளி - 3 (அரைத்தது)
சில்லி சாஸ் - 200 மி.லி
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
வெண்ணெய் - 60 கிராம்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் மீண்டும் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கி, மல்லி தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி, வேண்டுமானால், சிறிது எண்ணெயும் சேர்த்து கிளறி விட வேண்டும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் சில்லி சாஸ் ஊற்றி, கலவையை கொதிக்க விட வேண்டும்.
கலவையானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் வெண்ணெய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி, வெண்ணெயை உருக வைக்க வேண்டும்.
வெண்ணெயானது உருகியதும், அதில் பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், காரமான பன்னீர் மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications