Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
சோயா பீன்ஸ் குருமா
புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் நிறைந்த சோயா பீன்ஸில், இது தவிர வேறு பல சத்துக்களும் அதிகமாக உள்ளன. சோயா பீன்ஸ் மிகவும் சுவையான உணவுப் பொருள். இதனை வாரத்திற்கு 2 முறையாவது உணவில் சேர்க்க வேண்டும். ஏனெனில் இது பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். அதுவும் இதனை சாதத்திற்கோ அல்லது சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளும் படியாக, குருமா போன்று செய்து சாப்பிடலாம்.
இப்போது அந்த சோயா பீன்ஸ் குருமாவை எப்படி எளிதில் செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
உலர் சோயா பீன்ஸ் - 100 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பட்டை - 2
கிராம்பு - 4
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் சோயா பீன்ஸை இரவில் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும் அல்லது 4-5 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை கழுவி, குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் 1 பட்டை, 2 கிராம்பு, பச்சை மிளகாய், சோம்பு, துருவிய தேங்காய் போட்டு நன்கு நைஸாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீதமுள்ள பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயமானது பொன்னிறமானதும், தக்காளி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் வேக வைத்துள்ள சோயா பீன்ஸ் சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான சோயா பீன்ஸ் குருமா ரெடி!!!



Click it and Unblock the Notifications