Latest Updates
-
மாத்திரையின்றி பிபி கண்ட்ரோலா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்லும் இந்த 5 உணவுகளை தினமும் சாப்பிடுங்க போதும்.. -
சனி அமாவாசை: வீட்டின் இந்த ஒரு இடத்தில் மாற்றம் செஞ்சா மகாலட்சுமி தானாக வருவாள்! -
சாணக்கிய நீதி படி ஒரு பெண்ணை சிறந்த மனைவியாக 5 குணங்கள் என்னென்ன தெரியுமா? உங்க மனைவியிடம் இருக்கா? -
Vaikasi Matha Rasipalan 2026: வைகாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 15 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சவால்களால் ரொம்ப கஷ்டப்பட போறாங்களாம் -
13 வருடம் கழித்து சனிக்கிழமையில் வரும் சனி ஜெயந்தி: இந்த 3 ராசிக்காரங்க உச்சத்தை தொடப்போறாங்க.. -
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தக்காளி சட்னியை இந்த மாதிரி பஞ்சாபி ஸ்டைலில் அரைச்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
பிரபலங்களின் பிரிவா? வதந்திகளை நம்பி நீங்களும் இப்படித்தான் பேசுகிறீர்களா? உண்மை இதோ!
சோயா பீன்ஸ் குருமா
புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் நிறைந்த சோயா பீன்ஸில், இது தவிர வேறு பல சத்துக்களும் அதிகமாக உள்ளன. சோயா பீன்ஸ் மிகவும் சுவையான உணவுப் பொருள். இதனை வாரத்திற்கு 2 முறையாவது உணவில் சேர்க்க வேண்டும். ஏனெனில் இது பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். அதுவும் இதனை சாதத்திற்கோ அல்லது சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளும் படியாக, குருமா போன்று செய்து சாப்பிடலாம்.
இப்போது அந்த சோயா பீன்ஸ் குருமாவை எப்படி எளிதில் செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
உலர் சோயா பீன்ஸ் - 100 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பட்டை - 2
கிராம்பு - 4
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் சோயா பீன்ஸை இரவில் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும் அல்லது 4-5 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை கழுவி, குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் 1 பட்டை, 2 கிராம்பு, பச்சை மிளகாய், சோம்பு, துருவிய தேங்காய் போட்டு நன்கு நைஸாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீதமுள்ள பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயமானது பொன்னிறமானதும், தக்காளி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் வேக வைத்துள்ள சோயா பீன்ஸ் சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான சோயா பீன்ஸ் குருமா ரெடி!!!



Click it and Unblock the Notifications