Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
சோயா பீன்ஸ் குருமா
புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் நிறைந்த சோயா பீன்ஸில், இது தவிர வேறு பல சத்துக்களும் அதிகமாக உள்ளன. சோயா பீன்ஸ் மிகவும் சுவையான உணவுப் பொருள். இதனை வாரத்திற்கு 2 முறையாவது உணவில் சேர்க்க வேண்டும். ஏனெனில் இது பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். அதுவும் இதனை சாதத்திற்கோ அல்லது சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளும் படியாக, குருமா போன்று செய்து சாப்பிடலாம்.
இப்போது அந்த சோயா பீன்ஸ் குருமாவை எப்படி எளிதில் செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
உலர் சோயா பீன்ஸ் - 100 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பட்டை - 2
கிராம்பு - 4
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் சோயா பீன்ஸை இரவில் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும் அல்லது 4-5 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை கழுவி, குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் 1 பட்டை, 2 கிராம்பு, பச்சை மிளகாய், சோம்பு, துருவிய தேங்காய் போட்டு நன்கு நைஸாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீதமுள்ள பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயமானது பொன்னிறமானதும், தக்காளி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் வேக வைத்துள்ள சோயா பீன்ஸ் சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான சோயா பீன்ஸ் குருமா ரெடி!!!



Click it and Unblock the Notifications











