Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
புடலங்காய் பொடிமாஸ்
மதிய உணவின் போது சைடு டிஷ்ஷாக பொரியலில் என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியென்றால் புடலங்காய் பொடிமாஸ் செய்யுங்கள். இந்த புடலங்காய் பொடிமாஸ் செய்வது மிகவும் சிம்பிள். இதனை 10 நிமிடங்களில் செய்துவிடலாம்.
இங்கு அந்த புடலங்காய் பொடிமாஸ் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
புடலங்காய் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
துருவிய தேங்காய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 5
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
பிரியாணி இலை - 1
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 3
பூண்டு - 5 பற்கள் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் கடலைப்பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள புடலங்காயை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் ஊற வைத்துள்ள கடலைப்பருப்பை நன்கு கழுவி காய்கறியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் முந்திரியை பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் புடலங்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
காய்கறியில் உள்ள நீரானது வற்றி வெந்த பின், அதில் முந்திரியை லேசாக பொடி செய்து சேர்த்து, அத்துடன் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், புடலங்காய் பொடிமாஸ் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications