Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
புடலங்காய் பொடிமாஸ்
மதிய உணவின் போது சைடு டிஷ்ஷாக பொரியலில் என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியென்றால் புடலங்காய் பொடிமாஸ் செய்யுங்கள். இந்த புடலங்காய் பொடிமாஸ் செய்வது மிகவும் சிம்பிள். இதனை 10 நிமிடங்களில் செய்துவிடலாம்.
இங்கு அந்த புடலங்காய் பொடிமாஸ் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
புடலங்காய் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
துருவிய தேங்காய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 5
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
பிரியாணி இலை - 1
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 3
பூண்டு - 5 பற்கள் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் கடலைப்பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள புடலங்காயை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் ஊற வைத்துள்ள கடலைப்பருப்பை நன்கு கழுவி காய்கறியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் முந்திரியை பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் புடலங்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
காய்கறியில் உள்ள நீரானது வற்றி வெந்த பின், அதில் முந்திரியை லேசாக பொடி செய்து சேர்த்து, அத்துடன் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், புடலங்காய் பொடிமாஸ் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications