Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
சிவராத்திரி ஸ்பெஷல்: சேவ் தக்காளி சப்ஜி
சிவராத்திரிக்கு விரதம் இருப்பவர்கள், விரதம் முடிந்ததும் ஒருசில உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். அப்படி சமைக்கும் போது வேகமாக சமைக்குமாறான சமையலையே தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் இங்கு ஒரு குஜராத்திரி ஸ்டைல் ரெசிபியான சேவ் தக்காளி சப்ஜியை சிவராத்திரி விரதத்திற்கு கொடுத்துள்ளோம்.
இந்த ரெசிபி வித்தியாசமாக இருந்தாலும், விரதம் முடிந்து செய்து சாப்பிடுவதற்கு ஏற்றது. சரி, இப்போது அந்த குஜராத்தி ரெசிபியான சேவ் தக்காளி சப்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
தக்காளி - 8 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சேவ் - 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.
பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு 5 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும்.
பின்பு வெல்லத்தை நீரில் கரைத்து, அதனை வாணலியில் ஊற்றி 5-7 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதனை இறக்கும் போது, அதில் நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து ஒருமுறை கிளறிவிட்டு இறக்க வேண்டும்.
பின் அதன் மேல் சேவ்வை தூவி அலங்கரித்து, உடனே சாதத்துடன் சாப்பிட வேண்டும். இதனால் சேவ்வில் உள்ள மொறுமொறுப்பு போகாமல் சாப்பிடும் போது நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications