Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
சிவராத்திரி ஸ்பெஷல்: சேவ் தக்காளி சப்ஜி
சிவராத்திரிக்கு விரதம் இருப்பவர்கள், விரதம் முடிந்ததும் ஒருசில உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். அப்படி சமைக்கும் போது வேகமாக சமைக்குமாறான சமையலையே தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் இங்கு ஒரு குஜராத்திரி ஸ்டைல் ரெசிபியான சேவ் தக்காளி சப்ஜியை சிவராத்திரி விரதத்திற்கு கொடுத்துள்ளோம்.
இந்த ரெசிபி வித்தியாசமாக இருந்தாலும், விரதம் முடிந்து செய்து சாப்பிடுவதற்கு ஏற்றது. சரி, இப்போது அந்த குஜராத்தி ரெசிபியான சேவ் தக்காளி சப்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
தக்காளி - 8 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சேவ் - 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.
பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு 5 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும்.
பின்பு வெல்லத்தை நீரில் கரைத்து, அதனை வாணலியில் ஊற்றி 5-7 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதனை இறக்கும் போது, அதில் நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து ஒருமுறை கிளறிவிட்டு இறக்க வேண்டும்.
பின் அதன் மேல் சேவ்வை தூவி அலங்கரித்து, உடனே சாதத்துடன் சாப்பிட வேண்டும். இதனால் சேவ்வில் உள்ள மொறுமொறுப்பு போகாமல் சாப்பிடும் போது நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications