Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
சிவராத்திரி ஸ்பெஷல்: சேவ் தக்காளி சப்ஜி
சிவராத்திரிக்கு விரதம் இருப்பவர்கள், விரதம் முடிந்ததும் ஒருசில உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். அப்படி சமைக்கும் போது வேகமாக சமைக்குமாறான சமையலையே தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் இங்கு ஒரு குஜராத்திரி ஸ்டைல் ரெசிபியான சேவ் தக்காளி சப்ஜியை சிவராத்திரி விரதத்திற்கு கொடுத்துள்ளோம்.
இந்த ரெசிபி வித்தியாசமாக இருந்தாலும், விரதம் முடிந்து செய்து சாப்பிடுவதற்கு ஏற்றது. சரி, இப்போது அந்த குஜராத்தி ரெசிபியான சேவ் தக்காளி சப்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
தக்காளி - 8 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சேவ் - 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.
பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு 5 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும்.
பின்பு வெல்லத்தை நீரில் கரைத்து, அதனை வாணலியில் ஊற்றி 5-7 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதனை இறக்கும் போது, அதில் நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து ஒருமுறை கிளறிவிட்டு இறக்க வேண்டும்.
பின் அதன் மேல் சேவ்வை தூவி அலங்கரித்து, உடனே சாதத்துடன் சாப்பிட வேண்டும். இதனால் சேவ்வில் உள்ள மொறுமொறுப்பு போகாமல் சாப்பிடும் போது நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











