Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
சிவராத்திரி ஸ்பெஷல்: சேவ் தக்காளி சப்ஜி
சிவராத்திரிக்கு விரதம் இருப்பவர்கள், விரதம் முடிந்ததும் ஒருசில உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். அப்படி சமைக்கும் போது வேகமாக சமைக்குமாறான சமையலையே தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் இங்கு ஒரு குஜராத்திரி ஸ்டைல் ரெசிபியான சேவ் தக்காளி சப்ஜியை சிவராத்திரி விரதத்திற்கு கொடுத்துள்ளோம்.
இந்த ரெசிபி வித்தியாசமாக இருந்தாலும், விரதம் முடிந்து செய்து சாப்பிடுவதற்கு ஏற்றது. சரி, இப்போது அந்த குஜராத்தி ரெசிபியான சேவ் தக்காளி சப்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
தக்காளி - 8 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சேவ் - 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.
பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு 5 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும்.
பின்பு வெல்லத்தை நீரில் கரைத்து, அதனை வாணலியில் ஊற்றி 5-7 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதனை இறக்கும் போது, அதில் நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து ஒருமுறை கிளறிவிட்டு இறக்க வேண்டும்.
பின் அதன் மேல் சேவ்வை தூவி அலங்கரித்து, உடனே சாதத்துடன் சாப்பிட வேண்டும். இதனால் சேவ்வில் உள்ள மொறுமொறுப்பு போகாமல் சாப்பிடும் போது நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications