Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
சேனைக்கிழங்கு கூட்டு
மதிய வேளையில் எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து அழுத்துப் போயிருக்கும். ஆகவே அப்போது சற்று வித்தியாசமாக உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பல சத்துக்களை உள்ளடக்கிய சேனைக்கிழங்கை, கூட்டு போன்று செய்து, சாதத்துடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
கீழே அந்த சேனைக்கிழங்கு கூட்டின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை முயற்சித்து, எப்படியிருந்தது என்று சொல்லுங்கள்.
தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு - 500 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
மைசூர் பருப்பு - 1/2 கப் (நீரில் ஊற வைத்தது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
புளி சாறு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய் போட்டு மொறுமொறுவென்று வதக்கி இறக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் தேங்காய், சீரகம் மற்றும் வரமிளகாய் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஊற வைத்துள்ள மைசூர் பருப்பை நன்கு நீரில் கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலாவை போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு துண்டுகளாக்கப்பட்ட சேனைக்கிழங்கு, மைசூர் பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி விட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
சிறிது நேரம் கழித்து, குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து புளிச்சாற்றினை ஊற்றி, தீயை குறைவில் வைத்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
அடுத்து, வரமிளகாய் வதக்கிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடேற்றி, கடுகு, பெருங்காயத் தூள், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அடுப்பை அணைத்துவிட்டு, அதனை தூக்கி குக்கரில் ஊற்றி கிளறினால், சூப்பரான சேனைக்கிழங்கு கூட்டு ரெடி!!! இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
