Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
சேனைக்கிழங்கு கூட்டு
மதிய வேளையில் எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து அழுத்துப் போயிருக்கும். ஆகவே அப்போது சற்று வித்தியாசமாக உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பல சத்துக்களை உள்ளடக்கிய சேனைக்கிழங்கை, கூட்டு போன்று செய்து, சாதத்துடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
கீழே அந்த சேனைக்கிழங்கு கூட்டின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை முயற்சித்து, எப்படியிருந்தது என்று சொல்லுங்கள்.
தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு - 500 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
மைசூர் பருப்பு - 1/2 கப் (நீரில் ஊற வைத்தது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
புளி சாறு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய் போட்டு மொறுமொறுவென்று வதக்கி இறக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் தேங்காய், சீரகம் மற்றும் வரமிளகாய் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஊற வைத்துள்ள மைசூர் பருப்பை நன்கு நீரில் கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலாவை போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு துண்டுகளாக்கப்பட்ட சேனைக்கிழங்கு, மைசூர் பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி விட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
சிறிது நேரம் கழித்து, குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து புளிச்சாற்றினை ஊற்றி, தீயை குறைவில் வைத்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
அடுத்து, வரமிளகாய் வதக்கிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடேற்றி, கடுகு, பெருங்காயத் தூள், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அடுப்பை அணைத்துவிட்டு, அதனை தூக்கி குக்கரில் ஊற்றி கிளறினால், சூப்பரான சேனைக்கிழங்கு கூட்டு ரெடி!!! இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications












