Latest Updates
-
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க..
ஓணம் ரெசிபி!!! அரிசி புட்டு...
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவில் இருக்கும் அனைவரும் மிகவும் சுவையான உணவுகளை சமைத்து சாப்பிடுவர். அதிலும் ஓணம் பண்டிகை பத்து நாட்கள் நடைபெறுவதால், ஒவ்வொரு நாளும் அனைவரது வீடுகளிலும், விதவிதமான உணவுகளை சமைத்து உண்பர். அதில் ஒன்று தான் அரிசி புட்டு. புட்டு என்றாலே அது கேரளா தான் என்று அனைவருக்குமே தெரிந்த விஷயம். அத்தகைய கேரளா உணவான அரிசி புட்டுவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 4-5 கப்
தேங்காய் - 2-3 கப் (துருவியது)
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது உப்பை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்.
பின்னர் மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு, அதில் கொதிக்க வைத்துள்ள உப்பு நீரை விட்டு, புட்டுக்கு ஏற்றவாறு கலந்து கொள்ளவும். (முக்கியமாக தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட வேண்டாம். அதற்காக மிகுந்த வறட்சியுடனும் இருக்கக் கூடாது.)
பின்னர் அந்த புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1- 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, அந்த பாத்திரத்தில் கொடுத்திருக்கும் சிறு மூடியை வைத்து மூடி கொதிக்கவிடவும். பின்னர் புட்டு பாத்திரத்தில் நீளமாக இருக்கும் குழாயில், முதலில் சிறிது புட்டு மாவு சிறிது போட்டு, பின்னர் துருவிய தேங்காயை போட்டு, மறுபடியும் புட்டு மாவைப் போட்டு, குழாய் நிரம்பும் வரை தொடர்ந்து செய்யவும்.
பிறகு அந்த குழாயை புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து, 5-6 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். பின்னர் அதனை வெளியில் எடுத்து பரிமாறவும்.
மற்றொரு முறை :
புட்டு பாத்திரத்திற்கு பதிலாக இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, இட்லித் தட்டில் இட்லித் துணியை விரித்து, அதில் பிசைந்து வைத்துள்ள புட்டு மாவை தூவி, மூடி போட்டு வேக வைத்து இறக்கி பரிமாறலாம்.
இப்போது ஈஸியான அரிசிப் புட்டு ரெடி!!! இதனை சாம்பார் அல்லது சர்க்கரை தேங்காய் துருவல் துவியும் சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











