Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ரவை பொங்கல்

தேவையான பொருட்கள்:
வெள்ளை/கோதுமை ரவை - 1 கப்
பாசி பருப்பு - 1/2 கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
முந்திரி - 8
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப் பருப்பை போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, ரவையை போட்டு லேசாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீண்டும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, மிளகு, சீரகம் போட்டு, 2 நிமிடம் வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பின்னர் வறுத்து வைத்துள்ள சீரகம் மற்றும் மிளகை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்கும் போது, வேக வைத்துள்ள பாசிப் பருப்பு மற்றும் வறுத்து வைத்துள்ள ரவை மற்றும் உப்பு போட்டு கிளறி, கொதிக்க விட வேண்டும்.
நீரானது ரவையிலிருந்து குறையும் போது, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி கிளற வேண்டும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு, தீயை குறைவில் வைத்து கிளறி, 7-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
அதற்குள் ஒரு சிறு வாணலியில் நெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, முந்திரி மற்றும் பச்சை மிளகாய் போட்டு தாளித்து, மற்றொரு அடுப்பில் இருக்கும் ரவையில் ஊற்றி, கிளறி இறக்க வேண்டும்.
இப்போது சுவையான ரவை பொங்கல் ரெடி!!!



Click it and Unblock the Notifications