Latest Updates
-
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
காராமணி கடைசல்
பருப்பு வகைகளில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைய நிறைந்துள்ளன. எனவே அத்தகைய பருப்புக்களை வாரத்திற்கு 2-3 முறையாவது உணவில் சேர்க்க வேண்டும். அந்த வகையில் இன்று காராமணியை எப்படி எளிமையான முறையில் செய்வது என்று பார்க்கப் போகிறோம். இந்த ரெசிபியை பேச்சுலர்கள் கூட செய்து பார்க்கலாம். ஏனெனில் அந்த அளவில் இதன் செய்முறையானது மிகவும் எளிமையாக இருக்கும்.
சரி, இப்போது அந்த காராமணிக் கடைசலின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
காராமணி - 1 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
கரம் மசாலாவிற்கு...
பட்டை - 2
பச்சை ஏலக்காய் - 3
கருப்பு ஏலக்காய் - 2
கிராம்பு - 5
மிளகு - 15
ஜாதிக்காய் - 1
செய்முறை:
முதலில் காராமணியை 4-5 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் காராமணியை கழுவிப் போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்பு விசில் போனதும் குக்கரைத் திறந்து, காராமணியைக் குளிர வைக்க வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கரம் மசாலாவிற்கு கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் போட்டு, 2-3 நிமிடம் வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைக்க வேண்டும்.
அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
இறுதியில் வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, அரைத்து வைத்துள்ள கரம் மசாலாவை தூவி கிளறி இறக்க வேண்டும்.
அடுத்து, அதனை பருப்பு மத்து கொண்டு கடைந்து பரிமாறினால், சூப்பரான காராமணி கடைசல் ரெடி!!!



Click it and Unblock the Notifications