Latest Updates
-
ராகி சுரைக்காய் தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 16 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க உச்சத்தை தொடப்போறாங்களாம் -
சனி ஜெயந்தி நாளில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரங்கள ஆபத்தும், நஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
ராஜ்மாவை ஒருடைம் இப்படி கிரேவி செய்யுங்க.. மட்டன் கிரேவியே தோத்துப் போயிடும்... -
சனி ஜெயந்தி அன்று சனிபகவானை இந்த மாதிரி வழிபடுங்க - உங்கள் பாவமெல்லாம் மன்னிக்கப்படும் -
பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு! சாமானிய மக்களின் பட்ஜெட் இனி என்னவாகும்? அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்! -
அங்கமாலி மாங்கா கறி ரெசிபி - இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க, வேற லெவல் சுவையில் இருக்கும் -
Shani Jayanti 2026: சனி ஜெயந்தி நாளில் இந்த பரிகாரங்களை செய்யுங்க.. ஏழரை சனியின் தாக்கம் குறையும்.. -
உன்னாவ் வழக்கு: அதிகாரத்தின் பிடியில் சிக்கிய நீதி! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை உறுதி - பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி!
ராஜ்மா பரோட்டா

தேவையான பொருட்கள்:
சிவப்பு காராமணி (ராஜ்மா) - 1 கப் (வேக வைத்து, மசித்தது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி சாறு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பரோட்டாவிற்கு...
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பெரிய பௌலில் பரோட்டாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொட்களையும் போட்டு, தண்ணீரை மெதுவாக ஊற்றிக் கொண்டே, மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை போட வேண்டும். சீரகம் வெடித்ததும், அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நேரம் வதக்கி, பின் தக்காளி சாற்றை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பின்னர் மசித்து வைத்துள்ள சிவப்பு காராமணி, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறி, மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
அடுத்ததாக, பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை, சப்பாத்தி போல் தேய்த்து, அதன் நடுவே அந்த காராமணி கலவையை வைத்து, நான்கு புறமும் மூடி, மீண்டும் லேசாக தேய்த்து, தனியாக தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தி போன்ற பரோட்டாவை முன்னும் பின்னும் எண்ணெய் தேய்த்து, நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்தையும் செய்ய வேண்டும்.
இப்போது சுவையான ராஜ்மா பரோட்டா ரெடி!!!



Click it and Unblock the Notifications