Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
ராஜ்மா பரோட்டா

தேவையான பொருட்கள்:
சிவப்பு காராமணி (ராஜ்மா) - 1 கப் (வேக வைத்து, மசித்தது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி சாறு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பரோட்டாவிற்கு...
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பெரிய பௌலில் பரோட்டாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொட்களையும் போட்டு, தண்ணீரை மெதுவாக ஊற்றிக் கொண்டே, மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை போட வேண்டும். சீரகம் வெடித்ததும், அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நேரம் வதக்கி, பின் தக்காளி சாற்றை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பின்னர் மசித்து வைத்துள்ள சிவப்பு காராமணி, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறி, மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
அடுத்ததாக, பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை, சப்பாத்தி போல் தேய்த்து, அதன் நடுவே அந்த காராமணி கலவையை வைத்து, நான்கு புறமும் மூடி, மீண்டும் லேசாக தேய்த்து, தனியாக தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தி போன்ற பரோட்டாவை முன்னும் பின்னும் எண்ணெய் தேய்த்து, நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்தையும் செய்ய வேண்டும்.
இப்போது சுவையான ராஜ்மா பரோட்டா ரெடி!!!



Click it and Unblock the Notifications











