Latest Updates
-
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது!
ராஜ்மா பரோட்டா

தேவையான பொருட்கள்:
சிவப்பு காராமணி (ராஜ்மா) - 1 கப் (வேக வைத்து, மசித்தது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி சாறு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பரோட்டாவிற்கு...
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பெரிய பௌலில் பரோட்டாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொட்களையும் போட்டு, தண்ணீரை மெதுவாக ஊற்றிக் கொண்டே, மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை போட வேண்டும். சீரகம் வெடித்ததும், அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நேரம் வதக்கி, பின் தக்காளி சாற்றை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பின்னர் மசித்து வைத்துள்ள சிவப்பு காராமணி, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறி, மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
அடுத்ததாக, பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை, சப்பாத்தி போல் தேய்த்து, அதன் நடுவே அந்த காராமணி கலவையை வைத்து, நான்கு புறமும் மூடி, மீண்டும் லேசாக தேய்த்து, தனியாக தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தி போன்ற பரோட்டாவை முன்னும் பின்னும் எண்ணெய் தேய்த்து, நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்தையும் செய்ய வேண்டும்.
இப்போது சுவையான ராஜ்மா பரோட்டா ரெடி!!!



Click it and Unblock the Notifications