Latest Updates
-
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது?
பஞ்சாபி ஸ்டைல் தட்டை பயறு மசாலா
வட இந்தியாவில் பிரபலமான ஒரு ரெசிபி தான் பஞ்சாபி தட்டை பயறு மசாலா. இந்த ரெசிபியானது மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். இந்த ரெசிபி சாதம் மற்றும் சப்பாத்திக்கு மிகவும் சூப்பராக இருக்கும்.
இங்கு அந்த பஞ்சாபி தட்டை பயறு மசாலாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தவறாமல் முயற்சி செய்து பார்த்து, எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்:
தட்டை பயறு - 2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 4 (நறுக்கியது)
இஞ்சி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
பூண்டு - 6 பற்கள் (நறுக்கியது)
பச்சை மிளகாய - 2 (நறுக்கியது)
பிரியாணி இலை - 1
கிராம்பு - 2
பட்டை - 1/2 இன்ச்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்
செய்முறை:
முதலில் தட்டை பயறை வெதுவெதுப்பான நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை கழுவி குக்கரில் போட்டு, போதிய அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து 4 விசில் விட்டு இறக்கி, நீரை வடித்து தனியாக ஒரு பௌலில் தட்டை பயறை வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு தக்காளியை போட்டு, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
கலவையானது நன்கு குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, சீரகம், கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, பின் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, அத்துடன் மிளகு தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள தட்டை பயறை சேர்த்து, 6-7 நிமிடம் கலவை சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, அதன் மேல் பிரஷ் க்ரீம் மற்றும் கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான பஞ்சாபி ஸ்டைல் தட்டை பயறு மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications