Latest Updates
-
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
பஞ்சாபி ஸ்டைல் தட்டை பயறு மசாலா
வட இந்தியாவில் பிரபலமான ஒரு ரெசிபி தான் பஞ்சாபி தட்டை பயறு மசாலா. இந்த ரெசிபியானது மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். இந்த ரெசிபி சாதம் மற்றும் சப்பாத்திக்கு மிகவும் சூப்பராக இருக்கும்.
இங்கு அந்த பஞ்சாபி தட்டை பயறு மசாலாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தவறாமல் முயற்சி செய்து பார்த்து, எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்:
தட்டை பயறு - 2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 4 (நறுக்கியது)
இஞ்சி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
பூண்டு - 6 பற்கள் (நறுக்கியது)
பச்சை மிளகாய - 2 (நறுக்கியது)
பிரியாணி இலை - 1
கிராம்பு - 2
பட்டை - 1/2 இன்ச்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்
செய்முறை:
முதலில் தட்டை பயறை வெதுவெதுப்பான நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை கழுவி குக்கரில் போட்டு, போதிய அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து 4 விசில் விட்டு இறக்கி, நீரை வடித்து தனியாக ஒரு பௌலில் தட்டை பயறை வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு தக்காளியை போட்டு, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
கலவையானது நன்கு குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, சீரகம், கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, பின் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, அத்துடன் மிளகு தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள தட்டை பயறை சேர்த்து, 6-7 நிமிடம் கலவை சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, அதன் மேல் பிரஷ் க்ரீம் மற்றும் கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான பஞ்சாபி ஸ்டைல் தட்டை பயறு மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications











