புளியோதரை

By Staff

தேவையான பொருட்கள்:

1 கிலோ பச்சரிசி, 100 கிராம் புளி, 200 மில்லி நல்லெண்ணைய், 10 காய்ந்த மிளகாய், 1 கொத்து கறிவேப்பிலை,அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், 50 கிராம் கடலைப் பருப்பு, 1 துண்டு வெங்காயம், 2 தேக்கரண்டி எள், 2தேக்கரண்டி உளுந்து பருப்பு, 1 தேக்கரண்டி கடுகு, தேவையான அளவு உப்பு

செய்முறை:

அரிசியை ஊற வைத்து, பின்பு அதை சாதமாக வடித்து, ஆற வைக்க வேண்டும்.

கடலைப் பருப்பை ஊற வைக்க வேண்டும். வெந்தயம், எள் ஆகியவற்றை வெறும் வாணலியில் போட்டு வறுத்துபொடி செய்து கொள்ள வேண்டும். பெருங்காயத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும். மிளகாயை நறுக்கிவைத்துக் கொள்ளவும். புளியைக் கெட்டியாகக் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

எண்ணையைப் பாத்திரத்தில் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகைப் போடவும். கடுகு வெடித்ததும் ஊறவைத்தகடலைப் பருப்பை எடுத்துப் போடவும். கடலைப் பருப்பு சிவந்ததும் உளுந்துப் பருப்பு, கறிவேப்பிலை,மிளகாயைப் போடவும்.

மிளகாய் வதங்கிய பின்பு கரைத்த புளியை ஊற்றி உப்பு போட்டுக் கொதிக்க வைக்கவும். பொடி செய்தபெருங்காயம், மஞ்சள் தூள் ஆகியவற்றையும் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் அதை இறக்கி வைத்து,ஆறின சாதத்தில் கலந்து நன்கு கிளறவும். கிளறும்போது பொடி செய்த வெந்தயம், எள் இரண்டையும் கலக்கவும்.

Story first published: Tuesday, July 8, 2003, 16:50 [IST]
Desktop Bottom Promotion