Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: உருளைக்கிழங்கு கச்சோரி
கிருஷ்ண ஜெயந்தி வரப் போகிறது. அனைவரும் இந்த வருட கிருஷ்ண ஜெயந்திக்கு என்ன பலகாரம் செய்வதென்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். அத்தகையவர்களுக்கு ஒரு அருமையான ரெசிபி உள்ளது. அது என்னவென்றால், உருளைக்கிழங்கு கச்சோரி. இந்த கச்சோரி மிகவும் சிறியதாக இருப்பதால், இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இது ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் கூட.
சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு கச்சோரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கச்சோரி மாவிற்கு...
கோதுமை மாவு - 300 கிராம்
ரவை - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - 1/4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
உருளைக்கிழங்கு கலவைக்கு...
உருளைக்கிழங்கு - 6 (வேக வைத்து மசித்தது)
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 1/2 துண்டு
மாங்காய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, பேக்கிங் பவுடர், எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி ஓரளவு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் போட்டு தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி, மல்லி தூள், மாங்காய் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு நன்கு 3 நிமிடம் கிளறி விட்டு இறக்க வேண்டும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை, சிறு உருண்டைகளாக்கி, ஒரு உருண்டையை எடுத்து உள்ளங்கையில் வைத்து, தட்டையாக தட்டி, அதன் நடுவே பெருவிரல் கொண்டு ஒருமுறை அழுத்தி, ஒரு டீஸ்பூன் உருளைக்கிழங்கு கலவையை வைத்து, நன்கு மூடிக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ளவும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கச்சோரிகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான உருளைக்கிழங்கு கச்சோரி ரெடி!!! இதனை புதினா அல்லது மல்லி சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











