Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
பொங்கல்
திரவியம் தேடுவதற்காக கடல் கடந்து அயல் நாடுகளுக்கு செல்லும் தமிழர்கள் இழப்பது, நேசமுடன் வாழ்ந்த உறவினர்களையும்,துயரத்தில் தோள் கொடுத்த நண்பர்களையும் மட்டுமல்ல, தின்னத் தெவிட்டாத தமிழக உணவு வகைகளையும்தான்.
என்னதான் பீட்ஸாவும், சாண்ட்விச்சும் சாப்பிட்டாலும் அது, தண்ணீரில் மிதக்கும் தீவுகளென இருக்கும் சாம்பார் இட்லிக்கோ,ஜவ்வரி பாயசத்துக்கோ ஈடாவதில்லை. கல்யாணத்திற்குப் பின்னாவது இந்த வகை உணவுகளை வெளுத்துக் கட்டலாம்என்றால், இன்றைய பெண்கள் பலருக்கு சமையல் கலை கைவரப் பெறுவதில்லை.
அவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த சமையல் பக்கத்தை தொடங்கியுள்ளோம். தமிழர்களின் வாழ்வியல் கலாச்சாரத்தோடுகலந்து விட்ட சர்க்கரைப் பொங்கலை செய்வது எப்படி என்பதில் இருந்து ஆரம்பிப்போம்.
தேவையான பொருட்கள்:
2 லிட்டர் பச்சரிசி, 1400 கிராம் வெல்லம், 100 கிராம் திராட்சை, 250 கிராம் கடலைப் பருப்பு, 300 கிராம் முந்திரி பருப்பு,அரை லிட்டர் பால், இருபது ஏலக்காய், அரைக் கிலோ நெய், அரைக் கிலோ பயத்தம் பருப்பு, சிறிதளவு குங்குமப்பூ, தேவையானஅளவு தேங்காய்த் துருவல்
செய்முறை:
அரிசி, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் தனித்தனியே எடுத்து வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதேவாணலியில் கொஞ்சம் நெய் விட்டு தேங்காய்த் துருவலைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதேபோல் முந்திரிபருப்பையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு சட்டியில் 8 லிட்டர் நீர் ஊற்றி அடுப்பில் இட்டுக் கொதிக்க வைக்கவும். நீர் கொதித்தவுடன் அரிசி மற்றும் பருப்புகளைகலந்து போடவும். இவை நன்கு வெந்தவுடன் பாலை ஊற்றி நன்றாகக் கிளறவும். அவ்வாறு கிளறும்போது வறுத்த முந்திரிப்பருப்பையும், திராட்சைப் பழத்தையும் போட வேண்டும். நிதானமான சூட்டில் செய்வது முக்கியம்.
மற்றொரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு அதில் வெல்லத்தை உடைத்துப் போட்டு பாகு காய்ச்ச வேண்டும். பாகுபதமானதும், அடுப்பில் வேகும் சாதத்தில் கொஞ்சமாக கொஞ்சமாக ஊற்றி கிளறிவிட வேண்டும்.
பின்பு தேங்காய் துருவல், குங்குமப்பூ, நெய் ஆகியவற்றைச் சேர்த்து மெதுவாக கிளற வேண்டும். சிறிது நேரம் அடுப்பில் வைத்து,இறக்கி விட்டால் சூடான சர்க்கரைப் பொங்கல் ரெடி.



Click it and Unblock the Notifications











