Latest Updates
-
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
பட்டாணி காளான் மசாலா
காளான் பிரியர்களுக்கு அற்புதமான ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அது என்னவெனில் பட்டாணி மற்றும் காளான் சேர்த்து செய்யப்படும் மசாலா. இந்த மசாலா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் செய்து சுவைக்கும் வகையில் எளிமையான செய்முறையைக் கொண்டிருக்கும்.
மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த மசாலாவை சப்பாத்தி அல்லது சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். சரி, இப்போது பட்டாணி காளான் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
காளான் - 1 கப்
பச்சை பட்டாணி - 1/4 கப் (வேக வைத்தது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் தக்காளியை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். முந்திரியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் முந்திரியை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து 3 நிமிடம் பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
பின் அதில் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி, பின் முந்திரி பேஸ்ட் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, கிரேவியை நன்கு கொதிக்க விட வேண்டும்.
அதற்குள் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து அதில் காளானை போட்டு, காளான் தண்ணீரை வெளியேற்றும் வரை நன்கு சுருங்க வதக்கி இறக்கி, கொதிக்கும் கிரேவியில் சேர்த்து, அத்துடன் பட்டாணியையும் சேர்த்து, 8-10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், பட்டாணி காளான் மசாலா ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications