Just In
- 1 hr ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 1 hr ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 2 hrs ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 2 hrs ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
Don't Miss
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
பட்டாணி காளான் மசாலா
காளான் பிரியர்களுக்கு அற்புதமான ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அது என்னவெனில் பட்டாணி மற்றும் காளான் சேர்த்து செய்யப்படும் மசாலா. இந்த மசாலா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் செய்து சுவைக்கும் வகையில் எளிமையான செய்முறையைக் கொண்டிருக்கும்.
மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த மசாலாவை சப்பாத்தி அல்லது சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். சரி, இப்போது பட்டாணி காளான் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
காளான்
-
1
கப்
பச்சை
பட்டாணி
-
1/4
கப்
(வேக
வைத்தது)
பெரிய
வெங்காயம்
-
1
(பொடியாக
நறுக்கியது)
தக்காளி
-
2
(நறுக்கியது)
இஞ்சி
பூண்டு
பேஸ்ட்
-
1/2
டீஸ்பூன்
முந்திரி
-
1
டேபிள்
ஸ்பூன்
மிளகாய்
தூள்
-
1/2
டீஸ்பூன்
கரம்
மசாலா
-
1
டீஸ்பூன்
கொத்தமல்லி
-
சிறிது
உப்பு
-
தேவையான
அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய்
-
1
டீஸ்பூன்
சீரகம்
-
1
டீஸ்பூன்
செய்முறை:
முதலில் தக்காளியை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். முந்திரியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் முந்திரியை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து 3 நிமிடம் பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
பின் அதில் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி, பின் முந்திரி பேஸ்ட் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, கிரேவியை நன்கு கொதிக்க விட வேண்டும்.
அதற்குள் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து அதில் காளானை போட்டு, காளான் தண்ணீரை வெளியேற்றும் வரை நன்கு சுருங்க வதக்கி இறக்கி, கொதிக்கும் கிரேவியில் சேர்த்து, அத்துடன் பட்டாணியையும் சேர்த்து, 8-10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், பட்டாணி காளான் மசாலா ரெடி!!!
Image Courtesy: sharmispassions