Latest Updates
-
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை!
பேரிக்காய் மற்றும் உலர் திராட்சை சட்னி
குழந்தைகளுக்கு அதிக காரம் இல்லாத சட்னியை தினமும் யோசித்து அலுத்துவிட்டீர்களா? அப்படியானால் ஒரு சூப்பரான சட்னி ரெசிபியைக் கீழே கொடுத்துள்ளோம். அந்த சட்னியானது பேரிக்காய் மற்றும் உலர் திராட்சை கொண்டு செய்யப்படும் ஒரு சூப்பரான சட்னி. குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியது. மேலும் இது ஒரு ஜாம் போன்றும் இருக்கும்.
இதனை சரியாக பராமரித்து வந்தால் நீண்ட நாட்கள் வைத்திருக்கலாம். சரி, இப்போது அந்த பேரிக்காய் மற்றும் உலர் திராட்சை சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பேரிக்காய் - 1 1/2 கிலோ (தோலுரித்து நறுக்கியது)
நாட்டுச்சர்க்கரை - 1 கப்
வெள்ளை வினிகர் - 1 கப்
பால்சமிக் வினிகர் - 4 டீஸ்பூன்
வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
பூண்டு - 3 பற்கள் (பொடியாக நறுக்கியது)
உலர் திராட்சை - 1/2 கப்
கிராம்பு - 10
பட்டை - 1 இன்ச் (5-6)
உப்பு - 2 டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை
முதலில் ஒரு பெரிய வாணலியில் வெள்ளை வினிகர் மற்றும் நாட்டுச்சர்க்கரையை போட்டு, நன்கு கொதிக்க விட வேண்டும்.

செய்முறை
அடுத்து அதில் மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 1 மணிநேரம் நன்கு கலவை கெட்டியாகும் வரை வேக வைக்க வேண்டும்.

செய்முறை
பின்பு அந்த கலவையை இறக்கி, மத்து கொண்டு மசிக்க வேண்டும்.

செய்முறை
பிறகு அதனை ஒரு காற்று புகாத ஜாடியில் போட்டு, காற்றுபுகாதவாறு மூடி வைக்க வேண்டும்.

செய்முறை
இப்போது சூப்பரான பேரிக்காய் மற்றும் உலர் திராட்சை சட்னி ரெடி!!! இந்த சட்னியை சரியாக பராமரித்து வந்தால், 3-4 வாரங்கள் வரை நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications