Latest Updates
-
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க..
பன்னீர் கோப்தா குழம்பு
கோப்தா குழம்பை பலவாறு சமைக்கலாம். ஆனால் அவற்றில் சுரைக்காய் கோப்தா குழம்பு மிகவும் பிரபலமானது. மேலும் அசைவ உணவாளர்களுக்கு இறைச்சியை வைத்தும் கோப்தா குழம்பு செய்யலாம். ஆனால் இவற்றிலேயே பன்னீர் கோப்தா குழம்பு சற்று வித்தியாசமானதாக இருக்கும். ஏனெனில் இது பன்னீர் ரெசிபிக்களிலேயே மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் என்பதாலேயே ஆகும்.
இத்தகைய பன்னீர் கோப்தா குழம்பை எப்படி செய்வதென்று, அதன் செய்முறையைப் பார்த்து, வீட்டில் செய்து அசத்துவோமா!!!

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம் (துருவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு சிறு பாத்திரத்தில் துருவிய பன்னீர், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய 2 பச்சை மிளகாய், உப்பு மற்றும் கடலை மாவு சேர்த்து, தண்ணீர் ஊற்றி வடைக்கு ஏற்றவாறு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை, சிறு உருண்டைகளாக எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
அதே சமயம் மற்றொரு அடுப்பில் வேறொரு வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி கருஞ்சீரகம் மற்றும் மீதமுள்ள பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு, 3-4 நிமிடம் வதக்கி, பின் மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி வேகும் வரை மீண்டும் 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் சீரகப் பொடி சேர்த்து 2 நிமிடம் கிளறி, 2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட்டு, இறுதியில் கரம் மசாலா சேர்த்து, தீயை குறைவில் வைத்து மற்றொரு 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பன்னீர் கோப்தா குழம்பு ரெடி!!! இதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி தூவி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











