Latest Updates
-
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்!
பன்னீர் சன்னா மசாலா
பன்னீர் சன்னா மசாலாவானது வட இந்திய உணவுகளில் மிகவும் பிரபலமானது. இந்த ரெசிபியானது மிகவும் எளிமையானது. எந்த ஒரு கஷ்டமுமின்றி, வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே செய்யக்கூடியது. மேலும் இது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.
அந்த பன்னீர் சன்னா மசாலாவின் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை முயற்சித்துப் பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 1 கப்
பன்னீர் - 250 கிராம் (துருவியது அல்லது நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
கொண்டைக்கடலையை நீரில் போட்டு 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
5 மணிநேரம் ஆனப் பின்பு, அதனை கழுவி குக்கரில் போட்டு 1 கப் தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து தீயை குறைவில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கி, அதனை குளிர வைக்க வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து 5-6 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், மாங்காய் தூள், மிளகு தூள் சேர்த்து 5-6 நிமிடம் கிளறி, பன்னீரைப் போட்டு, கரம் மசாலா சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பன்னீர் சன்னா மசாலா ரெடி!!! இதன் மேல் சிறிது கொத்தமல்லியை தூவி சப்பாத்தியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications