Latest Updates
-
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
ஓணம் ஸ்பெஷல் இஞ்சி புளி
கேரளாவில் ஓணம் பண்டிகையன்று பல்வேறு வித்தியாசமான கேரள பாரம்பரிய ரெசிபிக்களானது சமைக்கப்படும். அப்படி கேரள பாரம்பரிய ரெசிபிக்களில் ஒன்று தான் இஞ்சி புளி. இந்த இஞ்சி புளியானது சாம்பார் சாதம், தயிர் சாதம், இட்லி மற்றும் தோசை போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும்.
இங்கு அந்த கேரளா இஞ்சி புளி ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
இஞ்சி - 3/4 கப் (தோலுரித்து பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 7 (பொடியாக நறுக்கியது)
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
வெல்லப் பாகு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 3/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 2
செய்முறை:
முதலில் புளியை 3/4 கப் வெதுவெதுப்பான நீரில் போட்டு 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தைப் போட்டு லேசாக வறுத்து இறக்கி குளிர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.
கலவையானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்து, கலவை கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
கலவையானது கெட்டியாகிவிட்டால், அதில வெல்லப் பாகு சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் வெந்தயப் பொடி சேர்த்து, 2 நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி இறக்கினால், இஞ்சி புளி ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











