Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பன்னீர் குடைமிளகாய் குழம்பு
குடைமிளகாயில் அதிக அளவில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், இதனை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது. அதுமட்டுமின்றி குடைமிளகாயை கோடைகாலத்தில் அதிகம் சாப்பிட்டால், வறட்சி ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும், அதனை பால் பொருட்களில் ஒன்றான பன்னீருடன் சேர்த்து, குழம்பு போல் செய்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு அளவே இருக்காது. மேலும் இந்த பொருட்களை வைத்து பல முறைகளில் சமைக்கலாம்.
சரி, இப்போது குடைமிளகாய் மற்றும் பன்னீரை சேர்த்து, வட இந்திய சுவையில் எப்படி குழம்பு செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம் (சிறியதாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பன்னீர் துண்டுகளை போட்டு, 2 நிமிடம் லேசான பொன்னிறத்தில் வந்ததும், அதனை ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே எண்ணெயில் சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
தக்காளியானது நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் மல்லித் தூள் சேர்த்து கிளற வேண்டும்.
பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு, இறுதியில் பன்னீர் துண்டுகளைப் போட்டு, மூடி 6-7 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது அருமையான சுவையில் பன்னீர் குடைமிளகாய் குழம்பு ரெடி!!! இதன்மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சாதத்துடனோ அல்லது சப்பாத்தியுடனோ சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications











