Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
உகாதி ஸ்பெஷல் மோர் குழம்பு ரெசிபி
தென்னிந்தியாவில் உகாதிக்கு செய்யப்படும் உணவுகளில் ஒன்று தான் மோர் குழம்பு. இந்த மோர் குழம்பு பெரும்பாலானோருக்கு பிடித்த குழம்பும் கூட. மேலும் இதனை செய்வது மிகவும் ஈஸி. சாதத்திற்கு அருமையான சைடு டிஷ்ஷூம் கூட.
இங்கு மோர் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
தயிர் - 1 கப்
வெள்ளை பூசணி - 1 கப் (நறுக்கியது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
தாளிப்பதற்கு...
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு வெந்தயம், தண்ணீர் மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையை தயிரில் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தயிரை ஊற்றி, அத்துடன் வெள்ளை பூசணியை சேர்த்த, 5-6 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இறுதியில் ஒரு சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதனை இறக்கி வைத்துள்ள மோர் குழம்பில் ஊற்றி, அதன் மேல் கொத்தமல்லியை தூவி இறக்கினால், மோர் குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications