Latest Updates
-
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம்
பாசிப் பருப்பு குருமா
விடுமுறை நாட்களில் நன்கு காரசாரமாக சாப்பிட்டிருப்பீர்கள். அப்படியே சாப்பிட்டால், வயிறானது புண்ணாகிவிடும். எனவே அவ்வப்போது பருப்பு வகைகளை உணவில் சேர்த்து வர வேண்டும். அந்த வகையில் இன்று பாசிப் பருப்பு குருமாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.
இந்த பாசிப் பருப்பு குருமாவானது இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த பாசிப் பருப்பு குருமாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
பூண்டு - 3-4
எலுமிச்சை - 1
பட்டை - 1/2 இன்ச்
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை சேர்த்து வாசனை வர நன்கு வறுக்க வேண்டும்.
பின்னர் அதனை குக்கரில் போட்டு, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, 1-2 விசில் விட்டு இறக்கி, மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, பின் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாற்றினை ஊற்றினால், பாசிப்பருப்பு குருமா ரெடி!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications