Latest Updates
-
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்..
பாசிப் பருப்பு குருமா
விடுமுறை நாட்களில் நன்கு காரசாரமாக சாப்பிட்டிருப்பீர்கள். அப்படியே சாப்பிட்டால், வயிறானது புண்ணாகிவிடும். எனவே அவ்வப்போது பருப்பு வகைகளை உணவில் சேர்த்து வர வேண்டும். அந்த வகையில் இன்று பாசிப் பருப்பு குருமாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.
இந்த பாசிப் பருப்பு குருமாவானது இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த பாசிப் பருப்பு குருமாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
பூண்டு - 3-4
எலுமிச்சை - 1
பட்டை - 1/2 இன்ச்
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை சேர்த்து வாசனை வர நன்கு வறுக்க வேண்டும்.
பின்னர் அதனை குக்கரில் போட்டு, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, 1-2 விசில் விட்டு இறக்கி, மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, பின் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாற்றினை ஊற்றினால், பாசிப்பருப்பு குருமா ரெடி!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications