Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
பாசிப்பருப்பு கடி ரெசிபி
வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் கடி. இது சைவ உணவாளர்களுக்கு ஒரு சிறப்பான மற்றும் சுவையான ரெசிபி. சிலர் விரத நாட்களில் வெங்காயம், பூண்டு போன்றவற்றை பயன்படுத்தமாட்டார்கள். அத்தகையவர்களுக்கு இந்த பாசிப்பருப்பு கடி ரெசிபி ஒரு சிம்பிளான மற்றும் ஈஸியான ரெசிபியாக இருக்கும்.
சொல்லப்போனால் இந்த ரெசிபி தென்னிந்தியாவில் செய்யப்படும் வடைக்கறி போன்றது தான். ஆனால் இதில் வெங்காயம், பூண்டு எதுவும் சேர்க்காமல் செய்யப்படுவதால், இதனை ஒரு விரத உணவு என்றும் சொல்லலாம். சரி, இப்போது அந்த பாசிப்பருப்பு கடி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 1/2 கப்
தயிர் - 2 கப்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அந்த பேஸ்ட்டை பாதியாக பிரித்து, ஒரு பாதியில், உப்பு, பச்சை மிளகாய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி சேர்த்து கலந்து. சிறு உருண்டைகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, அந்த உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து, ஒரு பேப்பர் டவலில் வைக்க வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, தயிரை அடித்து ஊற்றி, மீதமுள்ள அரைத்த பாசிப்பருப்பை போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, 15-20 நிமிடம் தீயை குறைவில் வைத்து கொதிக்க விட்டு, பொரித்து வைத்துள்ளவற்றை போட்டு, 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியை தூவி பரிமாறினால், சூப்பரான பாசிப்பருப்பு கடி ரெசிபி ரெடி!!!



Click it and Unblock the Notifications