Latest Updates
-
50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
காதலில் சம்மதம் முக்கியமா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை என்ன தெரியுமா? -
எடை இழப்புக்கு உதவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
'Main Tera' Day ட்ரெண்டில் காதலை சொல்லப் போறீங்களா? இந்த பாதுகாப்பு டிப்ஸ் தெரியாம மெசேஜ் அனுப்பாதீங்க, சிக்கலில் மாட்டிக்காதீங்க! -
ஒருடைம் வாழைப்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. முகம் பளிச்சென்று பிரகாசமா இருக்கும்.. -
Sonia Gandhi: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி - உண்மையில் அவருக்கு என்ன பிரச்சனை? -
வெயில் கொளுத்துதா? வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி கூட தேவையில்லை! -
ராகு-கேதுவிற்கு இடையில் வரும் சூரியன்: மே 15 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
கொளுத்தும் வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த 3 வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா வீடு ஜில்லென்று மாறும்!
கும்பகோணம் கடப்பா சாம்பார்
தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் மிகவும் பிரபலமானது தான் கடப்பா சாம்பார். இந்த சாம்பாரை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். நீங்கள் இந்த கடப்பா சாம்பாரை சுவைத்ததுண்டா? இல்லாவிட்டால், தொடர்ந்து படியுங்கள்.
ஏனெனில் இங்கு கும்பகோணம் கடப்பா சாம்பாரை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். இந்த கடப்பா சாம்பாரானது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, இதன் சுவை வித்தியாசமாக இருக்கும். சரி, இப்போது கும்பகோணம் கடப்பா சாம்பாரின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/4 கப்
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
துருவிய தேங்காய் - 1/4 கப்
பூண்டு - 4 பற்கள்
பச்சை மிளகாய் -1
சோம்பு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 2
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, மண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை கழுவிப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கி மசித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு பிரட்டி விட வேண்டும்.
பச்சை வாசனையானது போனதும், அதில் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி 5-7 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், கும்பகோணம் கடப்பா சாம்பார் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications