Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கேரளா தக்காளி ரசம்
ஓணம் பண்டிகையன்று கேரளாவில் சமைக்கப்படும் சமையலில் ஒன்று கேரளா தக்காளி ரசம். இந்த ரசம் வித்தியாசமான செய்முறையைக் கொண்டதோடு, சுவையும் வித்தியாசமாக இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டில் கேரளா தக்காளி ரசத்தை சமைக்க விரும்புகிறீர்களா?
இங்கு அந்த கேரளா தக்காளி ரசத்தின் செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
தக்காளி - 2 (பிசைந்தது)
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
பருப்பு வேக வைத்த தண்ணீர் - 1/4 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
பூண்டு - 6 பற்கள்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாயை 1 நிமிடம் வறுத்து இறக்கிக் கொள்ளவும். பின் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் மிக்ஸியில் வறுத்த வரமிளகாய், மிளகு, பூண்டு, சீரகம், மல்லி சேர்த்து கொரகொரவென்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ளதை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து, அத்துடன் பருப்பு வேக வைத்த தண்ணீர் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, கொத்தமல்லி தூவி, குறைவான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, பெருங்காயத் தூளைத் தூவினால், கேரளா தக்காளி ரசம் ரெடி!!!



Click it and Unblock the Notifications











