Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சத்தான காளான் கிரேவி

தேவையான பொருட்கள்
காளான் - 200 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி -1
இஞ்சி,பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
புதினா,மல்லி - சிறிது
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 3
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும். மற்றொரு வெங்காயத்தையும் நறுக்கி, அதனுடன் தக்காளி, தேங்காய், முந்திரி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு, அதில் காளானை போட்டு அலசி, நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், இஞ்சிபூண்டு பேஸ்ட், கரம் மசாலா, புதினா, மல்லி, பச்சைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அத்துடன் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும்.
பிறகு அந்த காளானுடன் மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துப் பிரட்டவும். பின்னர் சிறிது உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீரை விட்டு நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் அரைத்த கலவையைச் சேர்த்து தேவைக்கேற்ற தண்ணீர் ஊற்றி தேங்காய் வாடை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.
இப்போது சுவையான சத்தான காளான் குருமா ரெடி!



Click it and Unblock the Notifications