Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
சத்தான காளான் கிரேவி

தேவையான பொருட்கள்
காளான் - 200 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி -1
இஞ்சி,பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
புதினா,மல்லி - சிறிது
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 3
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும். மற்றொரு வெங்காயத்தையும் நறுக்கி, அதனுடன் தக்காளி, தேங்காய், முந்திரி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு, அதில் காளானை போட்டு அலசி, நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், இஞ்சிபூண்டு பேஸ்ட், கரம் மசாலா, புதினா, மல்லி, பச்சைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அத்துடன் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும்.
பிறகு அந்த காளானுடன் மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துப் பிரட்டவும். பின்னர் சிறிது உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீரை விட்டு நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் அரைத்த கலவையைச் சேர்த்து தேவைக்கேற்ற தண்ணீர் ஊற்றி தேங்காய் வாடை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.
இப்போது சுவையான சத்தான காளான் குருமா ரெடி!



Click it and Unblock the Notifications